Friday, March 12, 2010

ஆண்மைக் குறைபாடு பற்றி ஓர் அலசல்

உடலுறவின் போது ஏற்படும் ஏமாற்றங்களால், ஆண்கள் தங்களுக்கு ஆண்மை இல்லை என்று பயப்படுகிறார்கள் அதனைப்பற்றி ஒரு விரிவான அலசல். பெரும்பான்மையான ஆண்கள் தவறான படங்களைப்பார்த்தும் காதால் கேட்டும் தன்னை தானே குறைவாக எடைபோடுகின்றனர்.

முதலில் ஆண்மை குறைவுப்பற்றி ஆண்களிடம் நிலவும் தவறான கருத்துக்களைப் பற்றிப் பார்ப்போம். ஆண் குறி சிறியதாக இருத்தல், விந்து விரைவாக வெளியேறுதல், தூக்கத்தில் வெளியேறுதல், சுயஇன்பாம் கொள்ளுதல் தவறு என்று எண்ணுதல், போன்றவையாகும்.

ஆண் குறி சிறியதாக இருப்பது ஒரு பிரச்சனையே இல்லை ஏனென்றால் ? உடலுறுவு கொள்ள மிக குறைந்த அளவு கொண்டவையே போதுமானதாகும். மேலும் ஆணின் முதல் கட்ட பகுதி மட்டுமே மிகமுக்கிய பகுதியாகும், எனவே ஆண் குறி எவ்வளவு பெரிய தாக இருந்தாலும் அவை பயனற்றவை, மேலும் அது ஒரு பெண்ணுக்கு சந்தோஷத்தை அளிக்காது!. பெரிய அளவு கொண்டவர்கள் தான் ஆண்மை உடையவர்கள் என்பது மிக மிக தவறான கருத்தாகும்.

விந்து விரைவில் வெளியேறுதல் என்பது ஆண்மைக்கு ஒரு நல்ல அறிகுறியாகும், விஞ்ஞான முறைப்படி உறவு கொள்ள 2 நிமிடங்களே மிக அதிகமான நேரம் தான். அதிக நேரம் உறவு கொண்டால் தான் ஆண்மை என்பது மிக மிக தவறான ஒரு செய்தியாகும்.

துக்கத்தில் விந்து வெளியேறுவது என்பது இயற்கையாக நிகழும் ஒரு நிகழ்வாகும். எப்படி தண்ணீர் தொட்டி நிறைந்தால் வெளியேறுமோ! அது போல தான் இதுவும். விந்து உற்பத்தி அதிகமாக இருந்தால் இயற்கையாகவே அது ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளியேறிவிடும். இது ஆண்மையின் குறைபாடு அல்ல. இது ஆண்மகனின் ஆரோக்கியமான ஆண்மையினை காட்டுகிறது.



ஆண்மையை பெருகச் செய்யும் மருத்துவக் குறிப்புகள்


*
விரைவில் விந்து வெளியேறாமல் இருக்க, சிறு நீர் கழிக்கும் போது, தொடர்நது கழிக்காமல் சிறிது சிறிதாக நிறுத்தி கழிக்க வேண்டும், மேலும் காலை நேர யோகாவும் நல்ல பலனை தரும்.

ஓரிதழ் தாமைரை இலைகளை விடிவாதற்கு முன் தினந்தோறும் மென்று தின்று பால் அருந்திவர, பலவீனங்கள் சரியாகும்.

முருங்கைப் பூவை காய்ச்சி ஒரு அவுன்ஸ் பாலுடன் கலந்து குடிக்கலாம்.

ஆண்மை பெருக அத்திப்பழத்தினை முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம், முருங்கை கீரை, தவசி கீரை வாரா வராம் உணவில் சேர்த்துக் கொள்ளலம். மாதுளம் பழத்தினை தினந்தோறும் இரவில் சாப்பிடலாம், நாவல் பழங்களை தினந்தோறும் சாப்பிட்டுவரலாம்.

 

--
"Im not a HANDSOME guy, but I can give my HAND to SOME One who needs help""-Dr APJ

http://manikandanpharmacist.blogspot.com/



--
"Im not a HANDSOME guy, but I can give my HAND to SOME One who needs help""-Dr APJ

http://manikandanpharmacist.blogspot.com/

Friday, March 5, 2010

எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

எளிமையின் பேறு நோயற்ற வாழ்வு! எலுமிச்சையில் பெற்று வாழு!

lemon.jpgநோயின் ஆரம்பகாலம் எது? சமையல் என்ற ஒன்று என்று ஆரம்பிக்கப்பட்டதோ அன்றே நோயும் மனிதனை ஆட்கொள்ளத் தொடங்கியது என்றே கூற வேண்டம். நாவின் சுவைக்கு மனிதன் என்று அடிமையானானோ அன்றே நோயும் நாலும் பத்துமாக நாலாவிதத்திலும், நாலாபக்கங்களிலும் கிளைிவடத் தொடங்கியது. கல்வியோ, ஆய்வுக்கூடமோ தோன்றாத காலத்திலேயே முன் தோன்றிய மூத்த தமிழர் செடி, கொடி, மரங்களின் வேர், தண்டு, இலை, காய், கனி என்பவற்றின் குணக்கூறுகளை அறிந்திருந்தனர். நோய் தணிக்கவும், நீண்ட நாள் வாழவும், நோய் வருமுன் காக்கவும் இயற்கையிலேயே எமக்குக் கிடைக்கும் எளிய பொருட்களை எப்படிப் பயன்படுத்தி பலன்பெறலாம் எனப் பார்ப்போம்.

மருத்துவச் சக்கரவர்த்தி எலுமிச்சை!
ஆண்டாண்டு காலமாக நாம் பயன்படுத்தும் பழங்களிலேயே சுவையில், மணத்தில், குணத்தில் தனிச்சிறப்பு வாய்ந்தது எலுமிச்சையாகும். இதனிடம் காணப்பெறாத நற்பண்புகள் வேறு எந்தப் பழத்திலும் காண முடியாது. அதனால் தான் இப்பழம் மருத்துவச் சக்கரவாத்தி என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ குணங்கள் மட்டுமின்றி அதி முக்கிய மூலப்பொருள் கூட இதில் அடங்கியிருப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

உடல் நலம் பேண என்னென்ன பொருட்கள் அவசியமாகத் தேவையோ அவையனைத்தும் இந்த எலுமிச்சம் பழத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்பது வியப்பூட்டும் செய்தியாயினும் இது விந்தையல்ல முற்றிலும் உண்மையாகும். இரத்தத்தை தூய்மைப்படுத்துவதில் எலுமிச்சம் பழத்தைக் காட்டிலும் சிறந்த மருந்து வேறு ஒன்றும் இல்லை. எலுமிச்சை பழத்தோலிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கூட மிகுந்த சக்தி வாய்ந்தது. வாசனை மிகுந்தது. அதனால் அநேக வாசனைத்திரவிய தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. எலுமிச்சம் பழத்திலுள்ள சித்திரிக்அமிலம் கிருமிகளை எளிதில் கொன்று தொற்றகற்றக் கூடியது.

உடம்பில் கால்சியம் குறைந்தவர்களுக்கு எலுமிச்சம் பழரசத்தை எவ்வகையிலும் தயாரித்துக் கொடுக்கப் பலன் கிடைக்கும். அத்துடன் இதில் விட்டமின் "சி"யும் காணப்படுகிறது. எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து ஊறவிட்டு குளித்துவர சருமப்பிணிகளாகிய நமைச்சல், அரிப்பு, சொறி, சிரங்கு, கரப்பன், படை என்பவற்றிலிருந்து விடுதலை கிடைப்பததுடன் உடல் பளபளப்பும் பெறும். காயம் எற்படும் பட்சத்தில் ஒழுகும் இரத்தத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமையும் இப்பழத்திற்கு உண்டு. தவறாது எலுமிச்சம் பழச்சாறு அருந்திவர உடலின் அசதி, அலுப்பு என்பவை நீங்குவதுடன் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஏற்படும். இனி வேறு நோய்களுக்கும் இப்பழம் எப்படி நிவாரணம் அளிக்கிறது என்று பார்ப்போம்.

மலேரியா
எலுமிச்சம்பழச்சாற்றுடன் தேனையும் சமமாகக் கலந்து உண்டுவர மறுதலித்து வரும் மலேரியா எளிதில் குணமாகும்.

கல்லீரல் சீர்கேடு
கல்லீரல் சீர்கேட்டால் மூளை, இதயம், சிறுநீரகம், சுவாசப்பை என அனைத்துறுப்புகளும் பாதிப்படையும். இதனால் ஏற்படும் பிணிகளும் அதனால் ஏற்படும் உடலியல் பாதிப்புகளும் இதன் விளைவினால் தோன்றும் உளவியல் தாக்கங்களும் எண்ணிலடங்கா. இதைப் போக்க எலுமிச்சம்பழச் சாற்றடன் தக்காளிச் சாறும் கலந்து காலை, மாலை அருந்திவர மிக விரைவில் நலம் பெறலாம்.

இரத்த அழுத்தம்
நாள்தோறும் மோரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்திவர இரத்த அழுத்தம் குறைவடையும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு
காலையும் மாலையும் எலுமிச்சம் பழச்சாற்றை நீரில் கலந்து தேனும் சேர்த்து அருந்திவர சுகப்பிரசவம் ஆகும். இந்த மருத்துவத்தை கர்ப்பம் தரித்த நான்காவது மாதத்திலிருந்தே ஆரம்பித்துவிட வேண்டும். பிறக்கும் குழந்தையும் அழகாயும் ஆரோக்கியமாயும் பிறக்கும்.

முடி உதிர்வதைத் தடுக்க
உள்ளிப்பூண்டை நன்றாக விழுதாக அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் தேய்த்து முழுகிவர தலைமுடி உதிர்வது நிற்பதுடன் முடி செழிப்பாயும், கருமையாகவும் பொலிவுற்று வளரும்.

உடல் பருமன் குறைய
எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து நாள்தோறும் சாப்பிட்டு வருவதுடன் வாயைக்கட்டி நொறுக்குத் தீனிகளையும் தவிர்த்துவர பெண்களுக்கு கொடி உடலும் பொய்யோ என இடையும் ஆண்களுக்கு ஆனையுடல் மாறி ஆணழகனாய் மாறும் வாய்ப்பும் ஏற்படுவது திண்ணம்.

காதுவலி
எலுமிச்சம் பழச்சாற்றுட்ன இஞ்சிச் சாற்றையும் கலந்து 2 அல்லது 3 துளிகள் காதில் விடக் குணமாகும்.

வாய்த் துர்நாற்றம் போக்க
எலுமிச்சம்பழரசத்தை நீரில் கலந்து வாய் கொப்பளித்துவர துர்நாற்றம் போவதுடன் வாயில் ஏற்படும் புண், உதடு வறண்டு வெடித்தல் என்பனவும் குணமாகும்.

சறுமம் பொலிவு பெற
எலுமிச்சம் பழத்தோலைக் காயவைத்து அரைத்து பொடி செய்து தனித்தோ அன்றி பாலாடை அல்லது தயிருடன் கலந்து தேய்த்துக் குளித்துவர சருமம் பொலிவு பெறும்.

தொண்டை நோய், இருமல், வாதத்தை நீக்குதல், கபத்தை எடுத்தல் என்பது மட்டுமின்றி மூலத்தைக் கரைக்கவும் விஷத்தை முறிக்கும் தன்மையும் இந்தப் பழத்திற்கு உண்டு.

மலச்சிக்கல் இருந்தால் எலுமிச்சம்பழரசம் பாவிப்பது உகந்தல்ல. அது மலத்தைக் கட்டுப்படுத்தும். ஆனால் எலுமிச்சம்பழச்சாற்றை இஞ்சிச் சாற்றுடன் அல்லது சுக்குத் தூளுடன் கலந்து அருந்த மலச்சிக்கல் நீங்கும்.

உடலைத் தூய்மைப்படுத்தவும், உடலுறுப்புகள் சீராய் இயக்கவும், தூண்டவும், கூர்மையான மதியை ஏற்படுத்தவும், உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும், சருமப் பொலிவை பெறுவதற்கும் இப்பழம் உகந்தது.

இச்சாற்றுடன் உப்பை கலந்து குடித்தாலும் புத்துணர்ச்சி ஏற்படும். நகச் சுற்று வந்தால் எலுமிச்சம்பழத்தை விரலில் சொருகி வைத்து பலன் பெறுவதை நம் ஊர்களில் பார்த்திருக்கிறோம். தமிழர்கள் வீட்டில் எல்லாம் லெமன் ரைஸ், லெமன் ரசம், லெமன் ஊறுகாய் என்பவை மிகவும் அதிக அளவில் விசேட உணவு ஐயிட்டங்களாக இருப்பது என்பது வழக்கம்தானே.

அதிலும் லெமன் எனும் எலுமிச்சம் பழத்தை ஏதாவது ஒரு வகையில் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது என்பது நம் வீட்டு தாய்மார்களுக்கு ஒரு கை வந்த சமையற் சுவையாகும். யாரையாவது முதன் முறையாக பார்க்கப் போவதென்றால் கூட ஒரு எலுமிச்சம் பழத்துடன் சென்று, அவரிடம் கொடுக்கும் பழக்கமும், வாகனங்களை வெளிளோட்டம் விட, ஆலயத்திற்குச் சென்று வாகனத்தை நிறத்தி, வழிபட்டு, கற்பூர தீபம் காட்டி, அதன் சக்கரங்கள் அடியில் லெமனை வைத்து நசுக்கிவிடும் தன்மையில் வாகனத்தை ஓட்ட முற்படுவதும் நமது பாரம்பரியமல்லவா. இவ்வாறாக எலுமிச்சம் பழம், சாறு அதன் தோல், விதை, இலை அனைத்துமே அற்புத மருத்துவத் தன்மையுடன் நமது ஆரோக்கியத்திற்கு பாதுகாவலராக துணை புரிவதால், நீங்கள் அனைவரும் இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

மணிமேகலைப் பிரசுரம் வெளியீடு வளமான வாழ்விற்கு உணவே மருந்து - டாக்டர் றொசாரியோ ஜோர்ஜ், Ph.D.,வளமான வாழ்விற்கு உணவே மருந்து.




--
"Im not a HANDSOME guy, but I can give my HAND to SOME One who needs help""-Dr APJ

http://manikandanpharmacist.blogspot.com/

Monday, March 1, 2010

பூண்டு - அப்படி என்னத்தான் இருக்கு?

பூண்டு - அப்படி என்னத்தான் இருக்கு?

 

உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? இல்லையெனில், இனியாவது சேருங்கள்; பூண்டில் இல்லாத சத்துக்களே இல்லை. உங்கள் குடும்ப டாக்டர் பில் குறையணும்; இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.
கடுகு, மிளகு, தனியா போன்ற அன்றாட உணவு தானியங்களில் ஆரம்பித்து, நாம் பல ஆண்டாக பின்பற்றும் தானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் சரி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சரி, இந்த தானியங்கள் தான் சுவை சேர்க்கின்றன.
எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த உணவு தானியங்களில் உள்ள மகிமை, இப்போதுள்ள தலைமுறையினருக்கு தெரிவதில்லை என்பது வேதனை தான். இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் பட்டியலிட முடியாதவை. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பிறந்தது இந்த வெங்காய குடும்ப வகையை சேர்ந்த பூண்டு.
சீனாவை அடுத்து அதிகமாக உற்பத்தி செய்வது இந்தியா தான். மருத்துவ, உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இப்போது தான் பூண்டு மகிமை பலருக்கு தெரிகிறது.
* தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
* பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.
* பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.
* உணவில் சேர்த்தால் நல்லது தான்;ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.
* தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.
* சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.
* ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
* பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.
* அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும்.
* பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.

by Manikandan.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------
"Im not a HANDSOME guy, but I can give my HAND to SOME One who needs help""-Dr APJ

http://manikandanpharmacist.blogspot.com/