Tuesday, November 29, 2011

இதயத்தை காக்கும் வழிகள்


நம் இதயத்தை சரியாக கவனிக்காவிட்டால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தினசரி நம் செயல்களில் சிலவற்றை கடைப்பிடித்தாலே பிரச்னைகளில் இருந்து மீளலாம்.

சத்தம் குறைக்க வேண்டும்: கார், பேருந்தின் ஹாரன் ஒலி, சைரன், அங்குமிங்கும் இரைந்து கொண்டே செல்லும் லாரிகள், டிரக்குகள், தொழிற்சாலையிலிருந்து வரும் கடுமையான சத்தங்கள், வெடி வெடிக்கும் சத்தங்கள் போன்றவை ரத்தக்கொதிப்பு, மாரடைப்பை அதிகரிக்கும் என ஒரு டென்மார்க் ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இந்த ஆராய்ச்சியில் 51,000 பேர் பரிசோதிக்கப்பட்டனர். பெரும் சத்தம் உடலில் சுரக்கும் சில வேதிப்பொருள்கள் மற்றும் நாளமில்லா சுரப்பிகளில் சுரக்கும் Steroid அளவை அதிகரிப்பதால் மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு அதிகரிக்கிறது.

நல்ல தூக்கம் வேண்டும்: ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது இரவில் தூங்க வேண்டும், ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மற்றவரைக்காட்டிலும் 48 சதவீதம் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது.

கொஞ்சமாக தூங்குபவர்கள் அதிக பசியினால் அதிகமாக சாப்பிடுவார்கள். அதனால் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி, உடல் பருமன், கொழுப்பு அதிகரிக்கும். அதே நேரத்தில் அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல், ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கும் மேல் தூங்குபவர்களுக்கு மற்றவரை காட்டிலும் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் சாத்தியக்கூறு அதிகம்.

டயட் சோடா தவிர்க்க வேண்டும்: சமீபத்தில் கலிபோர்னியாவில் செய்த ஆராய்ச்சியில் ஒன்று டயட் சோடா குடிப்பவர்களுக்கு மற்றவரைக்காட்டிலும் 48 சதவீதம் அதிக அளவில் மாரடைப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு கறுப்பு திராட்சை, கறுப்பு நிற கத்தரிக்காய், முட்டைக்கோஸ், நாவல் பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு ரத்தக்கொதிப்பு வரும் வாய்ப்பு குறைவு.

1,34,000 பெண்கள், 47 ஆண்கள் உணவு பழக்கங்களை 14 வருடம் சோதித்து ஆராய்ந்ததில் மேற்குறிப்பிட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, ஆக்ஸிகரணத்தை குறைக்கக் கூடிய பொருளான(antioxidant) ஆத்ராசீனியஸ் என்ற பொருள் இதயநோய், ரத்தக்கொதிப்பு வருவதை தடுப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கறுப்பு சாக்லேட்: இதிலுள்ள கோகோ ரத்தக்கொதிப்பை குறைக்கும். ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் காக்கும். ரத்தம் உறைவதை குறைத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்கும்.

குறிப்பாக குறைந்த அளவில் அதாவது ஒரு நாளுக்கு 6.7 கிராம் அளவில் கறுப்பு சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு ரத்தக்குழாயை பாதிக்கும். CRP என்ற புரதப் பொருள் ரத்தத்தில் குறையும்.

இந்த CRP மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் நோயை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. சாக்லேட்டில் உள்ள பிளாசனாய்டு என்ற பொருள். ரத்தக் குழாயின் உள்ளே உள்ள செல்களை பாதுகாக்கும் மற்றும் ரத்தக் கொதிப்பை அதிகரிக்கக்கூடிய ACE என்ற வேதிப்பொருளின் செயல்பாட்டை குறைத்து ரத்தக்கொதிப்பை குறைக்கும்.


--
"Im not a HANDSOME guy, but I can give my HAND to SOME One who needs help""-Dr APJ

http://manikandanpharmacist.blogspot.com/

Sunday, October 9, 2011

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்



வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

Go to fullsize imageGo to fullsize image
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.

42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

இணையத்திலிருந்து...


__

Friday, July 1, 2011

அர்ப்பணிப்பு... சேவை... லட்சியம்: இன்று டாக்டர்கள் தினம்

நாம் உயிர்வாழ்வதற்கு, டாக்டர்களின் பணி அவசியம். தன்னலம் கருதாமல், சேவை செய்யும் இவர்களது பணி விலைமதிப்பற்றது. டாக்டர்களின் சேவைகளுக்கு நோயாளிகள் நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மருத்துவத்துறைக்கு டாக்டர்கள் தங்களது அர்ப்பணிப்பை நினைவுபடுத்திக்கொள்ளும் வகையிலும் டாக்டர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. டாக்டர்கள் தினம் அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் மார்ச் 30ம் தேதி கடைபிடிக்கப் படுகிறது.


மேற்குவங்கத்தின் இரண்டாவதுமுதல்வராக பதவிவகித்தவர் மறைந்த டாக்டர் பி.சி. ராய். சுதந்திர போராட்ட வீரராகமட்டு மல்லாமல், சிறந்த டாக்டராகவும் பணியாற்றிய இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை முதல் தேதியில் தான். ஏழை மக்களுக்காக பல்வேறு மருத்துவமனை களை தொடங் கினார். இவரது சேவைகளை போற்றும் வகையில் இந்தியாவில் ஆண்டு தோறும் ஜூலை 1ல் டாக்டர்கள் தினம் கடை பிடிக்கப்படுகிறது. இவருக்கு 1961ம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் மருத்துவம்,அறிவியல், கலை, இலக்கியம் போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு "பி.சி.ராய் தேசியவிருது' வழங்கப்படுகிறது. லட்சியம் பெரும்பாலான மாணவர்களிடம், "நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்' என கேட்டால், "டாக்டர் அல்லது இன்ஜினியராக வருவேத லட்சியம்,' என கூறுவார்கள். ஆனால் அவர் களது லட்சியம் நிறைவேறு கிறதா என பார்த்தால் சந்தேகமே. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மருத்துவ படிப்புகளுக்கான அரசு இடங்கள் குறைவு. எனவே நல்ல மதிப்பெண்கள் பெற்றும், பின்தங்கிய மாணவர்களால் மருத்துவ படிப்பை தொடர முடிவதில்லை. இதனால் டாக்டர்கள் அதிகளவில் உருவாவது தடைபடு கிறது. எனவே மருத்துவப் படிப்புக்கான அரசு இடங்களை அதிகரித் தால், டாக்டராக அதிகள விலான மாணவர்கள் உருவாக முடியும்.


மனிதாபிமானம்: வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் டாக்டர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மக்கள்தொகைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும். டாக்டர்கள் தங்களது பொறுப்புணர்ந்து, பணத்தை மட்டும் குறிக்கோளாகக்கொண்டு சிகிச்சையளிக்காமல், மனிதாபிமானத்தோடு சிகிச்சையளிக்க முன்வர வேண்டும்.


ஏழையின் சிகிச்சையில் "இறைவனை' காணலாம்: அர்ப்பணிப்பு டாக்டர்களின் "அனுபவங்கள்'


காலைத் தூக்கம் கலைந்து, கண்விழித்து பார்க்கும் காட்சி நல்லதாக, இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது மனித இயல்பு. இதில் டாக்டர்களுக்கு மட்டும் விதிவிலக்கு. பாதி தூக்கத்தில் எழுப்பினாலும் கோபமின்றி, ரத்தத்துடன் வலியால் அலறும் நோயாளியைக் கண்டு பதட்டப்படாமல் சிகிச்சை அளிப்பது தெய்வ இயல்பு. பொறுமையான அணுகுமுறை, ஆறுதலான வார்த்தை, அன்பான சிகிச்சையினால், இறைவனுக்கு அடுத்த நிலையில், டாக்டர்களை போற்றி வணங்குகிறோம். இன்று உலக டாக்டர்கள் தினம். தங்கள் பணியின் அர்ப்பணிப்பு அனுபவங்களை நினைவு கூறுகின்றனர், சில டாக்டர்கள்.


* ஜி.துரைராஜ் (இருதய நோய் நிபுணர், மதுரை): 1976ல் பொதுமருத்துவராக பணியை துவங்கினேன். 1996 முதல் இருதய நோய் நிபுணராக உள்ளேன். இருதய நோய்க்கு சிறப்பு பயிற்சி பெற்ற பின், நான் சந்தித்த முதல் நோயாளியே சிக்கலான சூழ்நிலையில் இருந்தார். கையில் இ.சி.ஜி., குறிப்பை கொண்டு வந்திருந்தார். இருக்கையில் அமர்ந்து பேச ஆரம்பித்த அடுத்த நொடி, அந்த 25 வயது இளைஞரின் நிலை மோசமாகி விட்டது. உடனடி மருத்துவ உதவி செய்து, உயிரைக் காப்பாற்றினேன். அவருக்கு வந்த இருதய நோய் கடுமையாக இருந்தது. அடுத்த மாதம் திருமணம் நடக்க இருப்பதாக சொன்னபோது, அதிர்ந்து விட்டேன். அவரது உடல்நிலையை எடுத்துச் சொன்ன போது, பெண் வீட்டார் திருமணத்திற்கு மறுத்துவிட்டனர். அதன்பின் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து, திருமணமும் செய்து நலமாக உள்ளார். பெரும்பாலானோர் இருதயவலியை, வாயு தொந்தரவாக நினைத்து கவனிக்காமல் விடுகின்றனர். வாயு தொந்தரவில் வலி அப்படியே இருக்கும் அல்லது குறையும். இருதய வலியில் தொடர்ந்து அதிகரிக்கும். அதிகமாக வியர்க்கும்.


* இளங்கோ முனியப்பன் (பொது மருத்துவ டாக்டர், திண்டுக்கல்): 15 ஆண்டுகளாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறேன். சென்ற வாரம் கட்டுவிரியன் பாம்பு கடித்த இளைஞரை பேச்சு, மூச்சில்லாமல் அழைத்து வந்தனர் உறவினர்கள். வாலிபர் இறந்து விட்டதாக நினைத்து, கதறி அழுதனர். உடனடியாக மருந்தை செலுத்தி, செயற்கை சுவாசம் கொடுத்து இரண்டு நாட்கள் பேச்சு இல்லாமல் இருந்த வாலிபரை காப்பாற்றினேன். நலம் பெற்று கண்ணீர் மல்க என்னை வணங்கிய போது, நான் பிறவிப்பயன் பெற்றதாக நினைத்தேன். மற்ற தொழிலுக்கு நேர எல்லை உண்டு. டாக்டர் தொழிலுக்கு மட்டும் உயிர்களை காப்பாற்ற நேரம் காலம் கிடையாது. ஒவ்வொரு நிமிடமும் போராட வேண்டும். இதற்கு நான் எப்போதும் தயாராக இருப்பேன்.


* எஸ்.கேசவன் (கண் மருத்துவர், தேனி): 29 ஆண்டுகளாக பொதுமருத்துவத்திலும், கண் மருத்துவத்தில் சிறப்பு பயிற்சி பெற்று 14 ஆண்டுகளாகின்றன. தேனியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி, பார்வையிழந்த நிலையில், தள்ளாடியபடி என்னிடம் வந்தார். அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைக்க செய்தேன். அதன் பிறகு நடந்த சுதந்திர தினவிழாவில், பங்கேற்க அவர் வந்ததை கண்டு, மனம் நெகிழ்ந்தேன். 2006ல் எனது மனைவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இக்கட்டான நிலையில், டாக்டர் என்ற முறையில் அவசரமாக செயல்பட்டு நின்ற நாடித்துடிப்பை மீட்டு, காப்பாற்றியது மறக்க முடியாத சம்பவம்.


* ஆர்.பாத்திமா (மகப்பேறு நிபுணர், ராமநாதபுரம்): கடந்த 30 ஆண்டுகளாக மருத்துவத்துறையில் பணியாற்றி வருகிறேன். ஏழைகளிடம் சிகிச்சைக்கு பணம் வாங்குவதில்லை. கர்ப்பப்பையில் கட்டியுடன் வந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தேன். தொப்புள் கொடி சுற்றிய நிலையில், குழந்தை வெளியே வர அப்பெண் மிகவும் சிரமப்பட்டார். நெருக்கடியான நேரத்தில் ஒருவழியாக குழந்தையை உயிருடன் மீட்டேன். தாயும், சேயும் அதன்பின் நன்றாகி விட்டனர். எதிர்காலத்தில் ராமநாதபுரத்தில் அனைத்து நவீன முறையில் சிகிச்சை அளிக்கும் வகையிலான மருத்துவமனையை உருவாக்கி, குறைந்த செலவில் மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.


* எஸ்.சபரிராஜா (குழந்தைகள் நல சிறப்பு நிபுணர், சிவகங்கை): டாக்டர் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் உண்டு. கிளினிக்கில் இருந்த போது, ஒரு வயது குழந்தை அருகில் இருந்த பூச்சி மருந்தை அறியாமல் குடித்திருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்சில் அழைத்து வந்தனர். அக்குழந்தையின் கண்கள் இரண்டும் மூடிய நிலையில் இருந்தது. குழந்தையை அழைத்து வந்த 108 ஆம்புலன்சில், விஷத்தை முறிக்க"அட்ரோபைன்' ஊசி மருந்து போதுமான அளவு இருந்தது. அந்த மருந்தை குழந்தைக்கு செலுத்தினேன். அதற்கு பின் குழந்தை கொஞ்சம் தெளிவானது. பெற்றோர் ஏழ்மை நிலையில் இருந்தனர். சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்திடம் பேசி, இலவசமாக மதுரை அரசு மருத்துவமனை அழைத்துச் செல்ல, அனுமதி பெற்றேன். அங்கு குழந்தை பிழைத்துக் கொண்டது. குழந்தைகள் கைக்கு எட்டும் வகையில், எந்த பொருளையும் வைக்கக்கூடாது. சிவகங்கையில் குழந்தைகள் சிகிச்சைக்கு 24 மணி நேர கிளினிக் இல்லை. அதை விரைவில் துவக்க உள்ளேன்.


* எஸ்.எம்.ரத்தினவேல், (சர்க்கரை நோய் நிபுணர், விருதுநகர்): நான் 31 ஆண்டுகளாக மருத்துவ சேவை செய்து வருகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன் விருதுநகரில் நடந்த பொருட்காட்சி அரங்கில் ராட்டினம் உடைந்து விழுந்தது. இரவு 12.30 மணிக்கு நடந்த சம்பவத்தில் 23 பேர் உயிருக்கு போராடினர். அரசு மருத்துவமனைக்கு, ஏழு தனியார் டாக்டர்கள் சென்று ஒருங்கிணைந்து பணியாற்றி முதலுதவி சிகிச்சை வழங்கி, மேல் சிகிச்சைக்கு மதுரைக்கு அனுப்பினோம். அனைவரும் உயிர் பிழைத்தனர். இதை என்னால் மறக்க முடியாது. எனது இரு மகன்களும் டாக்டர் ஒருவர் குழந்தைகள் நலப்பிரிவும், இருதய சிகிச்சை பிரிவுக்கும் மேல் படிப்பு படிக்கின்றனர். விருதுநகரில் ஏழைகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கும் வகையில், ஏற்பாடு செய்து வருகிறேன்.


எப்படி இருக்க வேண்டும் டாக்டர்கள்


டாக்டர்கள் மருத்துவத்துறையில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென, டாக்டர்கள் சொன்ன "டிப்ஸ்':


* மனிதாபிமானத்துடன், நேர்மையாக நடக்க வேண்டும்.


* கமிஷனுக்காக, தேவையற்ற மருத்துவ பரிசோதனைகள், ஸ்கேன் எடுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.


* கட்டணம் குறைவாக வாங்கிக் கொண்டு, அதிக விலையுள்ள மருந்துகளை எழுதி தரக்கூடாது.


* பணமில்லாத ஏழைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க தயங்கக்கூடாது. இது தெய்வத்திற்கு செய்யும் சேவைக்கு சமம்.


- நமது நிருபர் குழு -



--
"Im not a HANDSOME guy, but I can give my HAND to SOME One who needs help""-Dr APJ

http://manikandanpharmacist.blogspot.com/

Monday, May 30, 2011

Health Risks of Sitting Down

Did you know, Sitting down for more than six hours a day can increase your risk of death by as much as 40%! From increased risk of heart disease and obesity in the long term, to sharply hampered cholesterol maintenance in the short term, the negative health effects of sitting are starting to weigh heavily against the benefits.
Here is a fantastic info-graphic on the health risks of sitting, very informative!
Wait to load
 
 
 
Manikandan R
Pharmacist
http://manikandanpharmacist.blogspot.com



--
"Im not a HANDSOME guy, but I can give my HAND to SOME One who needs help""-Dr APJ

http://manikandanpharmacist.blogspot.com/

Sunday, May 22, 2011

Health Awareness - Brain Stroke

Dear Friends,
 
Information and knowledge on subjects based on health awareness should be shared with as many people as possible because we never know what is that we can do to save someone out from a grave and a difficult situation.
 
Prevention is anyday better than cure.
 
So, Please do share the attached PDF generously amongst your loved ones!
 
Thanks & Regards,
Manikandan R

Monday, April 25, 2011

TB Treatment For Co-Infections

 Post Subject: TB Treatment For Co-InfectionsReply With Quote

A South African treatment study conducted by researchers in the Department of Epidemiology at the Mailman School of Public Health shows that mortality among TB-HIV co-infected patients can be reduced by a remarkable 55%, if antiretroviral therapy (ART) is provided with TB treatment at the same time. The randomized, known as the SAPIT (Starting Antiretrovirals at three Points in Tuberculosis) trial, randomly assigned TB-HIV co-infected patients to receive ART. Patients who received ART together with their TB treatment (integrated treatment arm) were compared with patients assigned to receive ART upon completion of TB treatment (sequential treatment arm). 

"The study shows that integrating TB and HIV treatment and care saves lives," says Salim S. Abdool Karim, MD, PhD, professor of clinical Epidemiology at the Mailman School of Public Health and director of the Centre for the AIDS Program of Research in South Africa (CAPRISA), who led the SAPIT trial. The trial was conducted at the CAPRISA eThekwini TB-HIV Clinic which is attached to the largest TB clinic in Durban, South Africa. The study was initiated in June 2005 and completed enrollment of 645 patients with TB and HIV co-infection in July 2008. It is estimated that about 70% of all TB patients in South Africa are infected with HIV, or about 250,000 of the 353,879 TB patients diagnosed in 2007. 

As a result of the higher mortality rate in patients in the sequential treatment arm versus the mortality rate for those patients in the integrated treatment arm, the study's independent Safety Monitoring Committee recommended in their review of the trial in September 2008 that the sequential arm of the trial be stopped and that ART be initiated in this group as soon as possible. The Committee further recommended that the two sub-groups within the integrated treatment arm (early TB-HIV treatment and post-intensive phase TB-HIV treatment) should continue as per protocol. 

Dr. Peter Piot, executive director of UNAIDS, commented: "These important results show that a ''two diseases, one patient, one response" integrated approach to TB/HIV treatment avoids unnecessary deaths from TB, the leading cause of death in people living with HIV in Africa". TB is the most common disease occurring in the late stages of HIV infection in southern Africa. As a result, many people throughout southern Africa are first identified as HIV infected when they develop TB. The findings of the SAPIT study call for the accelerated implementation of routine HIV testing in TB treatment services. 

The SAPIT trial results provide compelling evidence to support the World Health Organization's call for the greater collaboration between TB and HIV treatment services and provide empiric evidence of the benefits from the initiation of antiretroviral therapy in TB-HIV co-infected patients. Dr Paul Nunn, of the Stop TB Department at the World Health Organization commented, "The results to date clearly show the urgent necessity to make ART available to HIV infected patients with TB worldwide." In South Africa alone, it would result in an additional 100,000 to 150,000 TB patients being initiated on ART resulting in about 10,000 deaths being averted each year. 

Ambassador Mark Dybul, Coordinator of the U.S. President's Emergency Plan for AIDS Relief (PEPFAR) said: "Scaling up collaborative TB/HIV activities is a priority for PEPFAR. We remain committed to increasing screening for both HIV and TB, which will allow greater numbers of patients to benefit from these study results."
_________________
 
 
"LIFE is full of challenges. BEING HAPPY should not be one of them."
http://manikandanpharmacist.blogspot.com/

Saturday, April 23, 2011

Wednesday, March 23, 2011

புற‌க் கர்ப்பம் ஏற்படக் காரணம் என்ன?

புற‌க் கர்ப்பம் ஏற்படக் காரணம் என்ன?  

மிக அரிதாக, முட்டையானது கருப்பைக் குழாய்க்கு வெளிப்பக்கதிலோ அல்லது குழாய்க்கு முனையிலேயோ கருவுற்கு, பிறகு வயிற்றுப் பள்ளத்தில் பதியமாகி, இரத்த ஓட்டத்தை உருவாக்கிக் கொண்டு வளரத் தொடங்கிவிடுகிறது. இத்தகைய கர்ப்பங்கள் பொதுவாக நிலைப்பதில்லை என்றாலும், மிக அரிதாக ஒன்றிரண்டு வளர்ந்துவிடுவது உண்டு. இவையெல்லாம் வெளிப்பகுதியில் கருத்தரிப்பை உண்டாக்குகின்றன. 

கருப்பைக் குழாயில் அடைப்பு அல்லது நோய்த்தொற்று ஏற்படுவதுதான் புறக் கர்ப்பத்துக்கான பொதுவான காரணம். 

உதாரணத்துக்கு, நோய்த் தொற்றினால் கருப்பைக் குழாய்கள் சேதமுற்று அவற்றின் உருவ அழைப்பு ஒழுங்கீனமாகி விடுவதால், உயிரணுக்களால் குழாயின் கடைசி நுனிவரை ஊர்ந்து செல்ல இயலாது. இதனால், சினைப்பையின் அருகில் கருத்தரப்பு நிகழ்கிறது. கருப்பைக் குழாயின் பாதை மிகக் குறுகியதாக இருப்பதால், அந்த வழியாக கருப்பைப் பள்ளத்தை நோக்கி சினைமுட்டை ஊர்ந்து செல்ல முடியாதபடி தடுட்ககப்பட்டு புறக் கர்ப்பம் உண்டாகிறது. 

இவை தவிர, வேறு எண்ணற்ற காரணிகளும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை : 

கடந்த முறை ஏற்பட்ட புறக் கர்ப்பம்,

சிசேரியன் முறையிலான கடினப் பேறு,

இடுப்புக் கூட்டில் அறுவைச் சிகிச்சை,

கருப்பைக் குழாய்களில் அடைப்பு, 

இடுப்புக் கூட்டுப்பகுதி கட்டிகள், 

தானாகக் தூண்டப்படுகிற கருச்சிதைவுகள் அல்லது கருவுறுதலுக்காகச் சாப்பிடும் மாத்திரைகள்,

உடலுறவுக்கு முன் ஈஸ்ட்ரோஜென் தடுப்பு மாத்திரையை எடுத்துக் கொள்ளுதல்.

 


Friday, March 11, 2011

TUBERCULOSIS

காசநோய்க்கிருமிகளைக் கண்டறியும் முறைகள்

1.சளிப்பரிசோதனை 
யாராவது ஒருவர் 3 கிழமைகளுக்கு மேல் இருமல் உடையவராயின் சளியினைப் பரிசோதனை செய்தல் வேண்டும். நோயாளி வந்தவுடன் ஒரு மாதிரியும் அடுத்தநாள் அதிகாலை மறு மாதிரியும் வைத்தியசாலையில் மறு மாதிரியும் சளிப்பரிசோதனை செய்யப்படும்.சளியில் 105/ml என கிருமிகள் காணப்படின் மட்டுமே நுணுக்கு காட்டியினால் கண்டு பிடிக்க முடியும்.                                       2. ஏனைய முறைகள்

1.வளர்ப்பு ஊடகங்களில் சளியினை இட்டு காசநோய்க் கிருமிகளின் பெருக்கத்தினை  அவதானித்தல்.

2. தோற் சோதனை (மாண்டு பரிசோதனை) 
3. CXR
நெஞ்சு எக்ஸ்கதிர்படம் 
4.
ஞரயவெகைநசழn வநளவ இரத்தப்பரிசோதனை

காசநோய்க்கான சிகிச்சை

சிகிச்சை அளிப்பதன் நோக்கங்கள்

காசநோயாளியை பூரணமாகக் குணமாக்குதல்.

காசநோயாளியை இறப்பிலிருந்தும், பின்விளைவுகளிலிருந்தும் பாதுகாத்தல்.

சமூகத்திற்கு நோய் பரவலைத்தடுத்தல் 
காச நோய் மீள ஏற்படுவதைத் தடுத்தல்.
காசநோய்க்கிருமிகள் மருந்துக்கு எதிர்ப்புத் தன்மை பெறுவதைத் தடுத்தல்.

இவை குறுகிய காலத்துக்கு (பொதுவாக 6 மாதங்களுக்கு) ஒழுங்காக பூரணமாக மருந்தை உட்கொள்ளச் செய்வதன் மூலம் அடையப் படுகிறது.இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலும், மார்பு நோய் சிகிச்சை நிலையங்களிலும் காசநோய்க்கான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. 
காசநோய்க்கான சிகிச்சை  வகை -1 
ஆரம்பத்தில் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும்சிகிச்சை. 
1)
ஆரம்ப அவத்தை (Intensive Phase)
இக் காலப்பகுதியில் நோய்க்கிருமிகள் விரைவாகக் கொல்லப்படும்.
நோயாளி எறத்தாழ இரண்டு வாரங்களில் ஏனையோருக்கு தொற்றை ஏற்படுத்த முடியாத நிலைக்கு மாற்றப்படுவதுடன் நோய்க்கான அறிகுறிகளும் குணமடையும்.
இச் சிகிச்சையின் போது பின்வரும் மருந்துகள் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.
றைபம்பிசின் (Rifampicin)
ஐசோனியாசிட் ( Isoniazid)
பைறசினமைட் (Pyrazinamide)
எதம்பியுட்டோல் (Etambutol)
2)Continuation phase
தற்போது நான்கு வில்லைகளும் ஒன்றாக்கப்பட்ட தனி வில்லையாக உள்ளது.தொடர் அவத்தைஇக்காலப் பகுதியில் உடலில் எஞ்சியுள்ள கிருமிகள் அழிக்கப்படும். றைபாம்பிசின், ஐசோனியாசிட் என்பன நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும்.
காசநோய்க்கான சிகிச்சை  வகை -2 
இச் சிகிச்சை மீளவும் காசநோய் வருபவர்களுக்கும், வகை 1 சிகிச்சை பயனளிகாதோருக்கும் சிகிச்சையினை முறையாகப் பெறாதோருக்கும் வழங்கப்படும். 

இதன்போது ஆரம்ப அவத்தையின் நான்கு மருந்துகளுடன் ஸ்ரெப்ரோமைசின் (Streptomycin)எனப்படும் ஊசியும் முதல் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.அடுத்த ஒரு மாதத்திற்கு நான்கு மருந்துகள் வழங்கப்படும்.

இறுதி ஐந்து மாதங்களுக்கு தொடர் அவத்தையின் இரண்டு மருந்துகளுடன் எதம்பியுட்டோல் வழங்கப்படும்.மொத்தமாக எட்டு மாதங்களுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

காசநோயுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணல்
பாதிக்கப்படும் அங்கம் நோய் ஏற்பட எடுக்கும் காலம் 
நுரையீரல் 3 - 7 மாதம் 
நுரையீரல் சுற்றுச் சவ்வு 6 - 7 மாதம் 
மூளை 1 - 3 மாதம் 
என்பு 1 - 3 வருடம் 
சிறுநீரகம் 5 - 7 வருடம் 
உள்வட்டம் :-
ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ஒரே அறையில் வேலைசெய்பவர்கள் சளிப்பரிசொதனை செய்தல் அவசியம்.
வெளிவட்டம் :-
அயல் வீட்டில் உள்ளோர் சிலவேளைகளில் சளிப்பரிசோதனை செய்தல் அவசியம் சளிப்பரிசோதனை செய்யும் போது, BMI கணிக்க வேண்டும் BMI 18 விடக்குறைவாயின் காசநோய் தொற்றல் நிகழ்வு அதிகம். 

BCG தடுப்பு மருந்து ஏற்றல்
BCG
தடுப்பு மருந்து குழந்தை பிறந்து 24 மணி நேரத்தினுள் சுகதேகியாகக் காணப்படுமிடத்து ஏற்றப்படுகின்றது. 
காசநோய் ஏற்படுவதை இது முற்றாகத் தடை செய்யாது.
இது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் மூளைக்காசம், மில்லியறி காசம் போன்ற காச நோயின் ஆபத்தான நிலைகளிலிருந்து பாதுகாக்கின்றது. 
BCG
போடப்படும் இடது கையின் மேற்புறத்தில் 6 மாதத்தில் அடையாளம் வராவிடின் மீளவும் தடுப்பு மருந்து ஏற்றல் அவசியம்.
மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையுள்ள காசநோய் கிருமிகள்
MDR-TB - Rifampicin மருந்திற்கும் INAH மருந்திற்கும் எதிர்ப்புத் தன்மை உடையது. 

XDR-TB - இது MDR TB இற்கு பாவிக்கும் மருந்துகளில் Amikacin, kanamyain Capreomycinஇற்கும் ofloxacin, ciprofloxacin  இற்கும் எதிர்ப்புத் தன்மை உடையது.  

உட்கொள்ளும் காசநோய் மருந்துகளின் பக்கவிளைவுகள்
ஆபத்து அற்றவை 
ஓங்காளம், உணவில் விருப்பம் இன்மை
சிறுநீர் செந்நிறமாக போதல் 
மூட்டுக்களில் நோ
பாதத்தில் எரிவு

ஆபத்தானவை
தோலில் சொறி, எரிச்சல்
தோல், கண்கள் மஞ்சள் நிறமடைதல்
அடிக்கடிவாந்தி ஏற்படல்
காதுகேளாத நிலை
தலைச்சுற்று
கண்பார்வை குறிப்பாக நீலம், பச்சை வேறுபடுத்தல் கடினம். 
மருந்துகளை ஒழுங்காக எடுக்காதவிடத்து ஏற்படும் பாதிப்புக்கள்
சரியான அளவு மருந்துகளை உரிய காலத்திற்கு உபயோகிக்காது விடுமிடத்து மருந்திற்கு எதிர்ப்புத்தன்மை உடைய காசநோய்க்கிருமிகள் உருவாகும். இதனால் தனது குடும்பத்தினருக்கும் அயலவர்கள் நண்பர்களிற்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவார்.மருந்துகளை சரிவரப் பாவிக்காதவர்கள் 50% மானோர் 5 வருடங்களிற்குள் இறந்து விடுகின்றனர். இடைநடுவே சிகிச்சையினைக் கைவிடுபவர்களுக்கு மீளவும் சிகிச்சையினை ஆரம்பித்தல். பொருளாதார ரீதியிலும் உளரீதியிலும் சுமையாக அமையும். 

காச நோய்

காச நோய்
மைக்கோ பாக்டீரியம் டியூபர்கிலோசிஸ் (Mycobacterium tuberculosis) எனும் கிருமியால் காச நோய் ஏற்படுகிறது. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமியின் வடிவத்தை வைத்து டியூபர்கிள் பாசில்லஸ் (tubercle bacillus) என்றும் அறிவியல் அழைக்கும் இந்த கிருமி, தாக்கும் போது உடலின் பல உறுப்புகள் பாதிப்பிற்குள்ளாகலாம் என்றும், ஆனால் இது நுரையீரலையே அதிகம் பாதிக்கிறது என்றும் மருத்துவம் கூறுகிறது.

நுரையீரலில் சென்று தங்கும் காச நோய் கிருமி, வேகமான பெருகுவதால் காய்ச்சலும், நெஞ்சு வலியும், இரத்தம் வெளிவரும் இருமலும், தொடர்ந்து இருமல் இருப்பதும் அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. ஆனால், இது அவ்வளவு சாதாரணமாக வலிமை பெறுவதில்லை என்று மருத்துவம் கூறுகிறது. ஒருவருடைய உடலின் எதிர்ப்பு சக்தியை (immune power) பொறுத்தே இந்நோய் வலிமை பெறுகிறது. காச நோய் கிருமி உடலிற்குள் வந்ததமும் பல்கிப் பெருகுவதில்லை. அது பல ஆண்டுகள் மறைவாகவே (latent), அதாவது எந்த அறிகுறியும் காட்டாமல் இருக்கும். உடல் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான் அது தனது தாக்குதலை தீவிரப்படுத்துகிறது. அப்போதுதான் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படும்.

நுரையீரல் மட்டுமின்றி, காச நோய் முற்றும்போது அது எலும்பு, சிறுநீரங்கங்கள், முதுகுத் தண்டையும், முளையையும் இணைக்கும் நரம்பு மண்டலத்தையும் தாக்கவல்லது என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது. சாதாரணமாக ஒருவர் காச நோய்க் கிருமியால் தாக்கப்பட்டிருந்தாலும், அது முற்றாத நிலையில் அது மற்றவரை பாதிப்பதில்லை. ஆனால் மேற்கண்ட அறிகுறிகள் வெளிப்படும் நிலையில் அது தொற்று நோயாகிறது. இதனை ஆக்டிவ் டிபி என்றழைக்கிறது மருத்துவம். இது உடலில் உள்ளிருந்தே உடற்பாகங்களை அழிக்க வல்லதாகையால் இதனை உடல் திண்ணும் நோய் என்றும் அயல் நாடுகளில் அழைக்கின்றனர்.

மேற்கண்ட அறிகுறிகள் காச நோய் முற்றிய நிலையில் காணப்படுவதாகும். காச நோய் முற்றிக்கொண்டிருக்கிற நிலையில், அதன் பாதிப்புள்ளவருக்கு காரணமற்ற உடல் எடை குறைவு, களைப்பு, சோர்வு, இலேசான மூச்சுத் திணறல், காய்ச்சல், இரவில் வியர்த்தல் அல்லது குளிர் காய்ச்சல், பசி இல்லாமை ஆகியனவாகும். மிகவும் குறிப்பான அறிகுறி, இடைவெளியின்றி இருமல் 2, 3 வாரங்களுக்குத் தொடர்தல், இருமலில் இரத்தம் வெளியேறுதல் ஆகியனவாகும்.
இந்த அறிகுறி தெரிந்த உடனேயே மருத்துவரை நாடினால் அவர்கள் அதனை பிபிடி (Purified protein derivative test) எனும் ஊசி போட்டு அடுத்த 72 மணி நேரத்தில் காச நோய் உள்ளதை உறுதி செய்வார்கள். அதன் பிறகு அதற்குரிய மருந்துகளை அளிப்பார்கள்.
காச நோய் வராமல் தடுக்க பிசிஜி எனும் தடுப்பு ஊசி போடப்படுவதுண்டு. இது உலக அளவில் பொதுவான தடுப்பு முறையாகும். இதனால் குழந்தைகளும், சிறுவர்களும் காச நோய் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர். ஆயினும் வயதான பிறகு காச நோய் தாக்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே முக்கிய காரணமாக உள்ளது உடலின் எதிர்ப்பு சக்தியே.
காச நோய் வராமல் தடுக்க... 
1. உடலில் எதிர்ப்பு சக்தியை குறையாமல் வைக்கக்கூடிய சிறந்த உணவுகளைச் சாப்பிடுவது.
2. மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் விடுபடுதல்.
3. உடற்பயிற்சியின் மூலம் உடலை எப்போதும் துடிப்போடு வைத்துக்கொள்ளல். 
4. காச நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்தி வைத்தால், அவர்களோடு புழங்க வேண்டிய நேரத்தில் வாய், மூக்கு ஆகியவற்றை தூய துணியால் மூடிக்கொண்டு பணி செய்தல்.
முதன்மை அறிகுறிகள் தெரிந்த உடனேயே மருத்துவரை கண்டு, உரிய பரிசோதனைகள் மூலம் ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்துகொள்ளல் அல்லது உரிய மருத்துவத்தை எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
காச நோயை தவிர்ப்போம் PDF Print E-mail

மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனைத்துலக காச நோய் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காச நோய் ஆண்டுதோறும் உலகில் 1.7 மில்லியன் மக்களை  கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

காச நோய் சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். இது மைக்கோ பக்ரீறியம் ரியூபர்கியூலோசிஸ் என்ற நுண்ணங்கியால் நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சுவாசச் சிறுதுணிக்கைகள் மூலம் பரவுகிறது,
 

காச நோயின் அறிகுறிகள

உடற் சோர்வு 
உணவு விருப்பின்மை 
நீடித்த காய்ச்சலும் இருமலும் 
மஞ்சட் சளி 
நெஞ்சு நோவு 
அடிக்கடி தடிமன் 
சிலரில் இரவுநேர அதிக வியர்வை 
இருமலுடன் அதிகளவு குருதி

சிகிச்சை

ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

காசநோய் தவிர்ப்ப


பிசிஜி தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும். 
மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்

மக்கள் நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள் இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.

போஷாக்குக் குறைபாடு எளிதாக இந்நோய் தொற்ற வழிவகுக்கும்

பசும்பாலினால் பரவும் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பதனிட்ட பாலை அருந்தவும்.

காச நோய் மிக கொடுமையானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் எப்போதும் வரலாம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி காச நோயாளிகள் தவறாமல் 6 மாதத்திற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிவிடும்.

இந்தியாவில் மட்டும் காச நோயால் தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள். காச நோய்க்கான அறிகுறிகளாக, தொடர்ந்து இருமல் இருப்பத, விட்டுவிட்டு காய்ச்சல் வருவது, உடல் மெலிவது, களைப்படைவது போன்றவையாகும். இப்படி ஒருவருக்கு இருந்தால் அவர் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும்.

காச நோய் ஒரு தொற்று வியாதி. எளிதில் பரவக்கூடியது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மல், இருமல் வரும்போதும், பேசும்போதும் கைக்குட்டையால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அந்த துணியை தனியாக துவைத்து காய வைக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் துப்பக் கூடாது.

குடும்பத்தில் ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டால், அவர் பாதுகாப்புடனும், எச்சரிக்கையாகவும் இருந்தால் மற்றவர்களுக்கு பரவலாமல் பாதுகாக்கலாம்.

பெரும்பாலும் குழந்தைகளையே இந்த நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. 40 சதவீதம் பேர் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காச நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.