Wednesday, March 23, 2011

புற‌க் கர்ப்பம் ஏற்படக் காரணம் என்ன?

புற‌க் கர்ப்பம் ஏற்படக் காரணம் என்ன?  

மிக அரிதாக, முட்டையானது கருப்பைக் குழாய்க்கு வெளிப்பக்கதிலோ அல்லது குழாய்க்கு முனையிலேயோ கருவுற்கு, பிறகு வயிற்றுப் பள்ளத்தில் பதியமாகி, இரத்த ஓட்டத்தை உருவாக்கிக் கொண்டு வளரத் தொடங்கிவிடுகிறது. இத்தகைய கர்ப்பங்கள் பொதுவாக நிலைப்பதில்லை என்றாலும், மிக அரிதாக ஒன்றிரண்டு வளர்ந்துவிடுவது உண்டு. இவையெல்லாம் வெளிப்பகுதியில் கருத்தரிப்பை உண்டாக்குகின்றன. 

கருப்பைக் குழாயில் அடைப்பு அல்லது நோய்த்தொற்று ஏற்படுவதுதான் புறக் கர்ப்பத்துக்கான பொதுவான காரணம். 

உதாரணத்துக்கு, நோய்த் தொற்றினால் கருப்பைக் குழாய்கள் சேதமுற்று அவற்றின் உருவ அழைப்பு ஒழுங்கீனமாகி விடுவதால், உயிரணுக்களால் குழாயின் கடைசி நுனிவரை ஊர்ந்து செல்ல இயலாது. இதனால், சினைப்பையின் அருகில் கருத்தரப்பு நிகழ்கிறது. கருப்பைக் குழாயின் பாதை மிகக் குறுகியதாக இருப்பதால், அந்த வழியாக கருப்பைப் பள்ளத்தை நோக்கி சினைமுட்டை ஊர்ந்து செல்ல முடியாதபடி தடுட்ககப்பட்டு புறக் கர்ப்பம் உண்டாகிறது. 

இவை தவிர, வேறு எண்ணற்ற காரணிகளும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை : 

கடந்த முறை ஏற்பட்ட புறக் கர்ப்பம்,

சிசேரியன் முறையிலான கடினப் பேறு,

இடுப்புக் கூட்டில் அறுவைச் சிகிச்சை,

கருப்பைக் குழாய்களில் அடைப்பு, 

இடுப்புக் கூட்டுப்பகுதி கட்டிகள், 

தானாகக் தூண்டப்படுகிற கருச்சிதைவுகள் அல்லது கருவுறுதலுக்காகச் சாப்பிடும் மாத்திரைகள்,

உடலுறவுக்கு முன் ஈஸ்ட்ரோஜென் தடுப்பு மாத்திரையை எடுத்துக் கொள்ளுதல்.

 


Friday, March 11, 2011

TUBERCULOSIS

காசநோய்க்கிருமிகளைக் கண்டறியும் முறைகள்

1.சளிப்பரிசோதனை 
யாராவது ஒருவர் 3 கிழமைகளுக்கு மேல் இருமல் உடையவராயின் சளியினைப் பரிசோதனை செய்தல் வேண்டும். நோயாளி வந்தவுடன் ஒரு மாதிரியும் அடுத்தநாள் அதிகாலை மறு மாதிரியும் வைத்தியசாலையில் மறு மாதிரியும் சளிப்பரிசோதனை செய்யப்படும்.சளியில் 105/ml என கிருமிகள் காணப்படின் மட்டுமே நுணுக்கு காட்டியினால் கண்டு பிடிக்க முடியும்.                                       2. ஏனைய முறைகள்

1.வளர்ப்பு ஊடகங்களில் சளியினை இட்டு காசநோய்க் கிருமிகளின் பெருக்கத்தினை  அவதானித்தல்.

2. தோற் சோதனை (மாண்டு பரிசோதனை) 
3. CXR
நெஞ்சு எக்ஸ்கதிர்படம் 
4.
ஞரயவெகைநசழn வநளவ இரத்தப்பரிசோதனை

காசநோய்க்கான சிகிச்சை

சிகிச்சை அளிப்பதன் நோக்கங்கள்

காசநோயாளியை பூரணமாகக் குணமாக்குதல்.

காசநோயாளியை இறப்பிலிருந்தும், பின்விளைவுகளிலிருந்தும் பாதுகாத்தல்.

சமூகத்திற்கு நோய் பரவலைத்தடுத்தல் 
காச நோய் மீள ஏற்படுவதைத் தடுத்தல்.
காசநோய்க்கிருமிகள் மருந்துக்கு எதிர்ப்புத் தன்மை பெறுவதைத் தடுத்தல்.

இவை குறுகிய காலத்துக்கு (பொதுவாக 6 மாதங்களுக்கு) ஒழுங்காக பூரணமாக மருந்தை உட்கொள்ளச் செய்வதன் மூலம் அடையப் படுகிறது.இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலும், மார்பு நோய் சிகிச்சை நிலையங்களிலும் காசநோய்க்கான சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது. 
காசநோய்க்கான சிகிச்சை  வகை -1 
ஆரம்பத்தில் கண்டறியப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும்சிகிச்சை. 
1)
ஆரம்ப அவத்தை (Intensive Phase)
இக் காலப்பகுதியில் நோய்க்கிருமிகள் விரைவாகக் கொல்லப்படும்.
நோயாளி எறத்தாழ இரண்டு வாரங்களில் ஏனையோருக்கு தொற்றை ஏற்படுத்த முடியாத நிலைக்கு மாற்றப்படுவதுடன் நோய்க்கான அறிகுறிகளும் குணமடையும்.
இச் சிகிச்சையின் போது பின்வரும் மருந்துகள் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.
றைபம்பிசின் (Rifampicin)
ஐசோனியாசிட் ( Isoniazid)
பைறசினமைட் (Pyrazinamide)
எதம்பியுட்டோல் (Etambutol)
2)Continuation phase
தற்போது நான்கு வில்லைகளும் ஒன்றாக்கப்பட்ட தனி வில்லையாக உள்ளது.தொடர் அவத்தைஇக்காலப் பகுதியில் உடலில் எஞ்சியுள்ள கிருமிகள் அழிக்கப்படும். றைபாம்பிசின், ஐசோனியாசிட் என்பன நான்கு மாதங்களுக்கு வழங்கப்படும்.
காசநோய்க்கான சிகிச்சை  வகை -2 
இச் சிகிச்சை மீளவும் காசநோய் வருபவர்களுக்கும், வகை 1 சிகிச்சை பயனளிகாதோருக்கும் சிகிச்சையினை முறையாகப் பெறாதோருக்கும் வழங்கப்படும். 

இதன்போது ஆரம்ப அவத்தையின் நான்கு மருந்துகளுடன் ஸ்ரெப்ரோமைசின் (Streptomycin)எனப்படும் ஊசியும் முதல் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.அடுத்த ஒரு மாதத்திற்கு நான்கு மருந்துகள் வழங்கப்படும்.

இறுதி ஐந்து மாதங்களுக்கு தொடர் அவத்தையின் இரண்டு மருந்துகளுடன் எதம்பியுட்டோல் வழங்கப்படும்.மொத்தமாக எட்டு மாதங்களுக்கு சிகிச்சை வழங்கப்படும்.

காசநோயுடன் தொடர்புடையவர்களை அடையாளம் காணல்
பாதிக்கப்படும் அங்கம் நோய் ஏற்பட எடுக்கும் காலம் 
நுரையீரல் 3 - 7 மாதம் 
நுரையீரல் சுற்றுச் சவ்வு 6 - 7 மாதம் 
மூளை 1 - 3 மாதம் 
என்பு 1 - 3 வருடம் 
சிறுநீரகம் 5 - 7 வருடம் 
உள்வட்டம் :-
ஒரே வீட்டில் வசிப்பவர்கள் ஒரே அறையில் வேலைசெய்பவர்கள் சளிப்பரிசொதனை செய்தல் அவசியம்.
வெளிவட்டம் :-
அயல் வீட்டில் உள்ளோர் சிலவேளைகளில் சளிப்பரிசோதனை செய்தல் அவசியம் சளிப்பரிசோதனை செய்யும் போது, BMI கணிக்க வேண்டும் BMI 18 விடக்குறைவாயின் காசநோய் தொற்றல் நிகழ்வு அதிகம். 

BCG தடுப்பு மருந்து ஏற்றல்
BCG
தடுப்பு மருந்து குழந்தை பிறந்து 24 மணி நேரத்தினுள் சுகதேகியாகக் காணப்படுமிடத்து ஏற்றப்படுகின்றது. 
காசநோய் ஏற்படுவதை இது முற்றாகத் தடை செய்யாது.
இது 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளில் மூளைக்காசம், மில்லியறி காசம் போன்ற காச நோயின் ஆபத்தான நிலைகளிலிருந்து பாதுகாக்கின்றது. 
BCG
போடப்படும் இடது கையின் மேற்புறத்தில் 6 மாதத்தில் அடையாளம் வராவிடின் மீளவும் தடுப்பு மருந்து ஏற்றல் அவசியம்.
மருந்துகளுக்கு எதிர்ப்புத்தன்மையுள்ள காசநோய் கிருமிகள்
MDR-TB - Rifampicin மருந்திற்கும் INAH மருந்திற்கும் எதிர்ப்புத் தன்மை உடையது. 

XDR-TB - இது MDR TB இற்கு பாவிக்கும் மருந்துகளில் Amikacin, kanamyain Capreomycinஇற்கும் ofloxacin, ciprofloxacin  இற்கும் எதிர்ப்புத் தன்மை உடையது.  

உட்கொள்ளும் காசநோய் மருந்துகளின் பக்கவிளைவுகள்
ஆபத்து அற்றவை 
ஓங்காளம், உணவில் விருப்பம் இன்மை
சிறுநீர் செந்நிறமாக போதல் 
மூட்டுக்களில் நோ
பாதத்தில் எரிவு

ஆபத்தானவை
தோலில் சொறி, எரிச்சல்
தோல், கண்கள் மஞ்சள் நிறமடைதல்
அடிக்கடிவாந்தி ஏற்படல்
காதுகேளாத நிலை
தலைச்சுற்று
கண்பார்வை குறிப்பாக நீலம், பச்சை வேறுபடுத்தல் கடினம். 
மருந்துகளை ஒழுங்காக எடுக்காதவிடத்து ஏற்படும் பாதிப்புக்கள்
சரியான அளவு மருந்துகளை உரிய காலத்திற்கு உபயோகிக்காது விடுமிடத்து மருந்திற்கு எதிர்ப்புத்தன்மை உடைய காசநோய்க்கிருமிகள் உருவாகும். இதனால் தனது குடும்பத்தினருக்கும் அயலவர்கள் நண்பர்களிற்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவார்.மருந்துகளை சரிவரப் பாவிக்காதவர்கள் 50% மானோர் 5 வருடங்களிற்குள் இறந்து விடுகின்றனர். இடைநடுவே சிகிச்சையினைக் கைவிடுபவர்களுக்கு மீளவும் சிகிச்சையினை ஆரம்பித்தல். பொருளாதார ரீதியிலும் உளரீதியிலும் சுமையாக அமையும். 

காச நோய்

காச நோய்
மைக்கோ பாக்டீரியம் டியூபர்கிலோசிஸ் (Mycobacterium tuberculosis) எனும் கிருமியால் காச நோய் ஏற்படுகிறது. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமியின் வடிவத்தை வைத்து டியூபர்கிள் பாசில்லஸ் (tubercle bacillus) என்றும் அறிவியல் அழைக்கும் இந்த கிருமி, தாக்கும் போது உடலின் பல உறுப்புகள் பாதிப்பிற்குள்ளாகலாம் என்றும், ஆனால் இது நுரையீரலையே அதிகம் பாதிக்கிறது என்றும் மருத்துவம் கூறுகிறது.

நுரையீரலில் சென்று தங்கும் காச நோய் கிருமி, வேகமான பெருகுவதால் காய்ச்சலும், நெஞ்சு வலியும், இரத்தம் வெளிவரும் இருமலும், தொடர்ந்து இருமல் இருப்பதும் அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. ஆனால், இது அவ்வளவு சாதாரணமாக வலிமை பெறுவதில்லை என்று மருத்துவம் கூறுகிறது. ஒருவருடைய உடலின் எதிர்ப்பு சக்தியை (immune power) பொறுத்தே இந்நோய் வலிமை பெறுகிறது. காச நோய் கிருமி உடலிற்குள் வந்ததமும் பல்கிப் பெருகுவதில்லை. அது பல ஆண்டுகள் மறைவாகவே (latent), அதாவது எந்த அறிகுறியும் காட்டாமல் இருக்கும். உடல் எதிர்ப்பு சக்தி குறையும்போதுதான் அது தனது தாக்குதலை தீவிரப்படுத்துகிறது. அப்போதுதான் மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படும்.

நுரையீரல் மட்டுமின்றி, காச நோய் முற்றும்போது அது எலும்பு, சிறுநீரங்கங்கள், முதுகுத் தண்டையும், முளையையும் இணைக்கும் நரம்பு மண்டலத்தையும் தாக்கவல்லது என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது. சாதாரணமாக ஒருவர் காச நோய்க் கிருமியால் தாக்கப்பட்டிருந்தாலும், அது முற்றாத நிலையில் அது மற்றவரை பாதிப்பதில்லை. ஆனால் மேற்கண்ட அறிகுறிகள் வெளிப்படும் நிலையில் அது தொற்று நோயாகிறது. இதனை ஆக்டிவ் டிபி என்றழைக்கிறது மருத்துவம். இது உடலில் உள்ளிருந்தே உடற்பாகங்களை அழிக்க வல்லதாகையால் இதனை உடல் திண்ணும் நோய் என்றும் அயல் நாடுகளில் அழைக்கின்றனர்.

மேற்கண்ட அறிகுறிகள் காச நோய் முற்றிய நிலையில் காணப்படுவதாகும். காச நோய் முற்றிக்கொண்டிருக்கிற நிலையில், அதன் பாதிப்புள்ளவருக்கு காரணமற்ற உடல் எடை குறைவு, களைப்பு, சோர்வு, இலேசான மூச்சுத் திணறல், காய்ச்சல், இரவில் வியர்த்தல் அல்லது குளிர் காய்ச்சல், பசி இல்லாமை ஆகியனவாகும். மிகவும் குறிப்பான அறிகுறி, இடைவெளியின்றி இருமல் 2, 3 வாரங்களுக்குத் தொடர்தல், இருமலில் இரத்தம் வெளியேறுதல் ஆகியனவாகும்.
இந்த அறிகுறி தெரிந்த உடனேயே மருத்துவரை நாடினால் அவர்கள் அதனை பிபிடி (Purified protein derivative test) எனும் ஊசி போட்டு அடுத்த 72 மணி நேரத்தில் காச நோய் உள்ளதை உறுதி செய்வார்கள். அதன் பிறகு அதற்குரிய மருந்துகளை அளிப்பார்கள்.
காச நோய் வராமல் தடுக்க பிசிஜி எனும் தடுப்பு ஊசி போடப்படுவதுண்டு. இது உலக அளவில் பொதுவான தடுப்பு முறையாகும். இதனால் குழந்தைகளும், சிறுவர்களும் காச நோய் பாதிப்பில் இருந்து காப்பாற்றப்படுகின்றனர். ஆயினும் வயதான பிறகு காச நோய் தாக்குவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே முக்கிய காரணமாக உள்ளது உடலின் எதிர்ப்பு சக்தியே.
காச நோய் வராமல் தடுக்க... 
1. உடலில் எதிர்ப்பு சக்தியை குறையாமல் வைக்கக்கூடிய சிறந்த உணவுகளைச் சாப்பிடுவது.
2. மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் விடுபடுதல்.
3. உடற்பயிற்சியின் மூலம் உடலை எப்போதும் துடிப்போடு வைத்துக்கொள்ளல். 
4. காச நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்தி வைத்தால், அவர்களோடு புழங்க வேண்டிய நேரத்தில் வாய், மூக்கு ஆகியவற்றை தூய துணியால் மூடிக்கொண்டு பணி செய்தல்.
முதன்மை அறிகுறிகள் தெரிந்த உடனேயே மருத்துவரை கண்டு, உரிய பரிசோதனைகள் மூலம் ஐயத்திற்கிடமின்றி உறுதி செய்துகொள்ளல் அல்லது உரிய மருத்துவத்தை எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
காச நோயை தவிர்ப்போம் PDF Print E-mail

மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனைத்துலக காச நோய் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காச நோய் ஆண்டுதோறும் உலகில் 1.7 மில்லியன் மக்களை  கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

காச நோய் சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். இது மைக்கோ பக்ரீறியம் ரியூபர்கியூலோசிஸ் என்ற நுண்ணங்கியால் நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சுவாசச் சிறுதுணிக்கைகள் மூலம் பரவுகிறது,
 

காச நோயின் அறிகுறிகள

உடற் சோர்வு 
உணவு விருப்பின்மை 
நீடித்த காய்ச்சலும் இருமலும் 
மஞ்சட் சளி 
நெஞ்சு நோவு 
அடிக்கடி தடிமன் 
சிலரில் இரவுநேர அதிக வியர்வை 
இருமலுடன் அதிகளவு குருதி

சிகிச்சை

ஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

காசநோய் தவிர்ப்ப


பிசிஜி தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும். 
மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்

மக்கள் நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள் இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.

போஷாக்குக் குறைபாடு எளிதாக இந்நோய் தொற்ற வழிவகுக்கும்

பசும்பாலினால் பரவும் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பதனிட்ட பாலை அருந்தவும்.

காச நோய் மிக கொடுமையானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் எப்போதும் வரலாம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி காச நோயாளிகள் தவறாமல் 6 மாதத்திற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிவிடும்.

இந்தியாவில் மட்டும் காச நோயால் தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள். காச நோய்க்கான அறிகுறிகளாக, தொடர்ந்து இருமல் இருப்பத, விட்டுவிட்டு காய்ச்சல் வருவது, உடல் மெலிவது, களைப்படைவது போன்றவையாகும். இப்படி ஒருவருக்கு இருந்தால் அவர் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும்.

காச நோய் ஒரு தொற்று வியாதி. எளிதில் பரவக்கூடியது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மல், இருமல் வரும்போதும், பேசும்போதும் கைக்குட்டையால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அந்த துணியை தனியாக துவைத்து காய வைக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் துப்பக் கூடாது.

குடும்பத்தில் ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டால், அவர் பாதுகாப்புடனும், எச்சரிக்கையாகவும் இருந்தால் மற்றவர்களுக்கு பரவலாமல் பாதுகாக்கலாம்.

பெரும்பாலும் குழந்தைகளையே இந்த நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது. 40 சதவீதம் பேர் இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காச நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.