Saturday, December 29, 2012

Home Remedies: Acidity, Cholesterol, Blood Pressure, Diabetes..


CURE FOR ACIDITY :

Description: cid:1.3203174981@web112902.mail.gq1.yahoo.com


Acidity, it is said, is worse than Cancer. It is one of the most common problems people encounter in their daily life. The home remedy for Acidity is Raw Grains of Rice. 


The Process: 

1. Take 8 - 10 grains of raw uncooked rice 

2. Swallow it with water before having your breakfast or eating anything in the morning 

3. Do this for 21 days to see effective results and continuously for 3 months to eliminate acidity from the body 

The Cure: 

Reduces acid levels in the body and makes you feel better by the day.

 

CURE FOR CHOLESTEROL: 

Description: cid:2.3203174982@web112902.mail.gq1.yahoo.com


Cholesterol problem accompanies with Hypertension and Heart Problems. This is also one of the common problems in people who have High Blood Pressure and Diabetes. The home remedy for Cholesterol problem is RAW SUPARI or

Betel Nuts.



The Process: 

1. Take Raw Supari (Betel Nut that is not flavoured) and slice them or make pieces of the same 

2. Chew it for about 20 - 40 minutes after every meal 

3. Spit it out 

The Cure: 

When you chew the supari, the saliva takes in the juice that is generated and this acts like a Blood Thinner. Once your blood becomes free flowing, it brings down the pressure in the blood flow, thereby reducing Blood Pressure too.

 

CURE FOR BLOOD PRESSURE:

Description: cid:3.3203174982@web112902.mail.gq1.yahoo.com


One of the simple home remedy cure for Blood Pressure is Methi Seeds or Fenugreek Seeds. 

The Process: 

1. Take a pinch of Raw Fenugreek Seeds, about 8 - 10 seeds 

2. Swallow it with water before taking your breakfast, every morning 

The Cure: 

The seeds of Fenugreek are considered good to reduce the blood pressure.

CURE FOR DIABETES: 

There are 2 home remedies for Diabetes. One is Black Tea

and the other is Lady Fingers or Okra.


BLACK TEA: 
Due to high medication, the organ that is worst affected is the Kidney. It has been observed that Black Tea (tea without milk, sugar or lemon) is good for the Kidney. Hence, a cup of black tea every morning is highly advisable.

Description: cid:4.3203174982@web112902.mail.gq1.yahoo.com


The Process: 

1. Boil water along with the tea leaves (any tea leaves will do). 

2. Drink the concoction without adding milk, sugar or lemon. 

The Cure: 

Black Tea will help in enhancing the function of the kidney, thereby not affecting it more.

 

LADY FINGER or OKRA: 

Lady Finger/Okra is considered to be a good home medicine for diabetes.

Description: cid:5.3203174982@web112902.mail.gq1.yahoo.com


The Process: 

1. Slit the ladies finger into 2 halves vertically and soak it in water overnight. 

2. The next morning, remove the ladies fingers and drink the water, before eating your breakfast. 

The Cure: 

After the ladies fingers are soaked overnight in the water, you can observe that the water becomes sticky in the morning. This sticky water is considered to be good for people who suffer from Diabetes.
Source http://groups.yahoo.com/group/dilsedesigroup/message/348231

Monday, December 17, 2012

குழந்தையின் வளர்ச்சி

குழந்தையின் வளர்ச்சி :
பொதுவாக குழந்தை பிறந்ததிலிருந்து அவர்கள் வளர்ச்சியின் நிலைகள் மாதாமாதம் மாறிக்கொண்டே செல்கிறது.பிறந்த குழந்தையானது...

முதல் மாதத்தில் : சத்தம் வரும் பக்கம் தலையைத் திருப்பும்
2-வது மாதத்தில் : மற்றவர்களைப் பார்த்து சிரிக்கும்
3-வது மாதத்தில் : தலை ஆடாமல் நிற்கும். தாயைத் தெரிந்து கொள்ளும். சத்தங்களை எழுப்பும்.
5-வது மாதத்தில் : நன்றாகப் புரளும். மற்றவர்களுடைய உதவியுடன் உட்கார முடியும்.
6-வது மாதத்தில் : தன் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சிரிக்கும். 'மா', 'பா' போன்ற ஓர் எழுத்து ஒலிகளை எழுப்பும்.
7-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் உட்காரும்.
8-வது மாதத்தில் : தவழும்.
9-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் நிற்கும் 'மாமா', 'பாபா' போன்ற இரண்டு எழுத்து சொற்களைச் சொல்லும் 'டாட்டா' சொல்லும்.
10-வது மாதத்தில் : மற்றவர்கள் உதவியுடன் தளர்நடை நடக்கும்.
12-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நிற்கும் அர்த்தம் தரும் இரண்டு வார்த்தைகளைச் சொல்லும்.
13-வது மாதத்தில் : மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடக்கும்.
24-வது மாதத்தில் : மாடிப்படி ஏறும். சிறு வாக்கியங்களைப் பேசும்.
36 வது மாதத்தில் : மூன்று சக்கர சைக்கிள் ஓட்டும்.
  • கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் 'சி' மற்றும் 'டி' அதிகம் உள்ள பால், பழம், பச்சைக் காய்கறிகள் மற்றும் மீன், முட்டை போன்றவற்றைபாலூட்டும் தாய்மார்கள் உட்கொண்டால் குழந்தைக்குப் பல் முளைத்தலில் சிரமம் இருக்காது.
  • பல் முளைக்கும் பருவத்தில் குழந்தையின் கை நகங்களையும், விரல்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் விஷக் கிருமிகள் குடலினுள் சென்று வயிற்றுப் போக்கு ஏற்படும். பல் துலக்கும் நல்ல பழக்கத்தை இரண்டாம் வயது இறுதியில் துவக்குவது நலம். அதுவரையில் உணவு உட்கொண்ட பிறகு – முக்கியமாக செயற்கை இனிப்புப் பண்டங்களை உண்ட பிறகு தண்ணீர் விட்டு வாயைக் கழுவினாலே பற்கள் தூய்மையாகும்.
  • ஆறு மாதத்தில் ஆரம்பித்து 24 மாதத்துக்குள் தற்காலிகமான இருபது பற்களும் முளைத்துவிடும். தற்காலிகப் பற்கள் இருபதும் ஆறு வயதில் இருந்து 12 வயதுக்குள் விழுந்து அதற்குப் பதில் 28 நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். நிரந்தரப் பற்கள் மொத்தம் 32. அதில் கடைசி கடைவாய்ப் பற்கள் நான்கும் 25 வயதில் முளைக்கும்.

பிறந்த குழந்தைக்கான உணவு


  • பிறந்த குழந்தைக்கு, முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால்தான் மிகச் சிறந்த மலிவான, பாதுகாப்பான, எளிதில் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து உணவு. பிரசவித்தவுடன் சுரக்கும் பால் மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்புடன் இருக்கும். இதைச் சீம்பால் என்பார்கள். இதில் பல ஊட்டச் சத்துக்களும், நோய் எதிர்ப்பு தன்மைகளும் இருப்பதால் இதைத் தவறாமல் குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.
  • பிறந்த குழந்தையைத் தொட்டிலில் போடாமல் தாய் தன் அரவணைப்பில், படுக்க வைத்துக் கொள்ள வேண்டும். தொட்டிலிலோ தூளியிலோ போடும் பழக்கம் நல்லது அல்ல.
  • குழந்தை பிறந்ததும், சர்க்கரை, தேன் ஆகியவை கலந்த நீர், வெண்ணெய் போன்றஎதுவும் வேண்டாம். வெயில் காலத்தில் மட்டும் கொதித்து ஆறிய சுத்தமான நீரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறைசுமார் 15 மி.லி கொடுக்கலாம். வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து மருந்துகளை, தேவைப்பட்டால் மட்டும் மருத்துவ ஆலோசனையுடன் கொடுக்கலாம்.
  • தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்கள் பசும்பாலில் இரண்டு பங்கும் தண்ணீரில் ஒரு பங்கும் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆறவைத்த பிறகு சிறிதளவு சர்க்கரையை சுவைக்குச் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
  • குழந்தைக்குப் பால் ஊட்டி முடித்தவுடன் படுக்கையில் போட்டால், பாலைக் கக்கிவிடும். பால் ஊட்டியவுடன் குழந்தையைத் தோளில், அதன் முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்தால் ஏப்பம் விடும். ஏப்பம் விட்ட பிறகு படுக்கையில் விட்டால் பாலைக் கக்காது.
பாலுடன் சேர்ந்த பிறஉணவுகள் :


தாய்ப்பாலை சாதாரணமாக ஒன்பது மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை கொடுத்து வருவது நல்லது.
  • ஆறாவது மாதத்தில், தாய்ப்பாலுடன், சிறிதளவு கோதுமை மற்றும் அரிசி, பருப்பு, கலந்த காரம் இல்லாமல் தயாரித்த உணவை ஊட்டலாம். மேலும் மசிந்த உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், கீரை ஆகியவற்றையும் கொடுக்கலாம்.
  • ஒன்பதாவது மாதத்தில் மேற்கூறியவற்றுடன் வேகவைத்த முட்டையின் மஞ்சள்கரு, கனிந்த வாழைப்பழம், ஆப்பிள், பப்பாளி, மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாதுளம்பழம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறு ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
  • பத்தாவது மாதத்தில், இட்லி, தோசை, போன்றவற்ûயும் ஊட்டலாம்.
  • பதினொன்றாவது மாதத்தில், வேகவைத்த முட்டையின் வெள்ளைக் கருவையும் கொடுக்கலாம்.
  • பன்னிரண்டாவது மாதத்திலிருந்து பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளையும் குழந்தைக்கு சாப்பிடக் கொடுக்கலாம்.
  • அரிசி, கோதுமை, கேழ்வரகு, பொட்டுக் கடலை போன்ற உணவுகளை சர்க்கரையைக் கலந்து கொதிக்க வைத்துக் கஞ்சியாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
  • புதுவகை உணவைக் கொடுக்கும் போது பழக்கமான உணவைக் கொடுப்பது போல ஒட்டு மொத்தமாக அதிகம் கொடுக்கக் கூடாது. எந்தப் புதுவகை உணவையும் தினமும் ஒருமுறைசிறிதளவு கொடுத்துப் பழக்கிய பிறகே, அந்த உணவின் அளவை அதிகப்படுத்த வேண்டும்.


  • குழந்தையும் கை மருத்துவமும் :

  • பிறந்த குழந்தைகளுக்கு எரி சாராயத்தில் (ஸ்பிரிட்) நனைத்த பஞ்சால் தொப்புளை லேசாகத் தொட்டு சுத்தம் செய்யலாம். தொப்புளிலிருந்து சீழ் அல்லது ரத்தம் வந்தால் உடனே மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
  • பிறந்த இரண்டாவது நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் பெரும்பாலான குழந்தைகளின் கண்களும் உடலும் லேசான மஞ்சள் நிறமாக மாறலாம். குழந்தை பிறந்த பிறகு அதனுடைய கல்லீரலின் செயல் திறன் முழுமை பெற10 – 15 நாட்கள் ஆகும் என்பதால், மஞ்சள் நிறமாற்றம் குழந்தையின் உடலில் ஏற்படுகிறது. இது இரண்டு வாரங்களுக்குள் சரியாகிவிட வேண்டும். பதினைந்து நாட்களுக்குப் பிறகும் உடல் மஞ்சள் நிறமாக இருந்தால் அது "மஞ்சள் காமாலை" நோயாக இருக்கலாம்.
  • பிறந்த இரண்டு நாட்களுக்கு குழந்தை அடர் கரும்பச்சை நிறத்தில் மலம் கழிக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு மலம் மஞ்சளாகவும் இளகியும் இருக்கும். தினமும் ஒன்று முதல் நான்கைந்து முறை மலம் கழிக்கலாம். ஆனால் புட்டிப்பால் குடிக்கும் குழந்தை தினமும் குறைந்த தடவையே மலம் கழிக்கும்.
  • சில குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறைகூட மலம் கழிக்கும். அதனால் பிரச்சனை இல்லை. வயிறு உப்புதல் இல்லாமலும் குழந்தை நன்கு உணவு உண்டும் சுறுசுறுப்புடனும் இருந்தால் மலம் கழித்தலில் ஒரு கோளாறும் இல்லை. குழந்தையின் உடல் எடை வயதுக்கேற்றஅளவு இருக்க வேண்டும். மேலும் தண்ணீர், பழரசம் இவற்றைக் கொடுத்தாலே யாதொரு தடங்கலுமின்றி குழந்தை சுலபமாக மலம் கழிக்கும்.
  • குழந்தைக்கு பேதி ஏற்பட்டால் பயந்து கொண்டு தாய்ப்பாலை நிறுத்தக்கூடாது. முதலுதவியாக சர்க்கரை – உப்புச் கரைசல் நீரை அரைமணி நேரத்திற்கு ஒருமுறை 50 மில்லியும் ஒவ்வொரு முறைபேதி ஆனதற்கு பிறகு சுமார் 100 மில்லியும் கொடுக்க வேண்டும். இந்த சர்க்கரை உப்புக் கரைசலை கீழ்க்காணும்படி வீட்டிலேயே தயாரிக்கலாம்.
  • கொதிக்கவைத்து ஆறவைத்த ஒரு லிட்டர் சுத்தமான நீரில் ஒரு கைப்பிடி சர்க்கரை, மூன்று சிட்டிகை உப்பு, இரண்டு சிட்டிகை சோடா உப்பு, இளநீர் 100 மில்லி ஆகியவற்றைக் கலந்து கொள்ள வேண்டும். பேதி நிற்கும் வரை உபயோகிக்க வேண்டும்.
  • இத்தகைய கரைசல் மாவு, மருந்துக் கடைகளில் எலக்ட்ரால் மற்றும் எலக்ட்ரோபயான் என்ற பெயர்களில் கிடைக்கின்றன.
  • பேதியாகும் போது குழந்தையின் உச்சிக் குழி அமுங்கி இருத்தல், குழந்தை உணவு உண்ணாதிருத்தல், கண் சொருகிவிடுதல், வலிப்பு, அதிக ஜுரம், மூச்சு வேகமாக விடுதல், வயிறு உப்புதல் ஆகியவை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

குழந்தைகளுக்கான சுகாதாரம் :


  • கைகளை சுத்தமான சோப்பு போட்டுக் கழுவிய பிறகுதான் குழந்தைக்குரிய உணவைத் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரைதான் உபயோகிக்க வேண்டும். சுத்தமான பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும்.
  • புட்டிப்பால் கொடுத்தால் புட்டி, ரப்பர் சூப்பிகள் ஆகியவற்றைக் கொதிநீரில் போட்டு சுத்தப்படுத்திய பிறகே உபயோகிக்க வேண்டும். பாட்டிலில் மிஞ்சிய பாலை மீண்டும் உபயோகிக்கக் கூடாது.
  • குழந்தைகளைக் குளிப்பாட்டுவதற்கு மிருதுவான பேபி சோப்பை உபயோகிக்கலாம். சுத்தமான துணிகளையே உபயோகிக்க வேண்டும்.
  • குழந்தையைக் குளிப்பாட்டும் போது அதனுடைய மூக்கில் ஊதக்கூடாது. கண்கள் மற்றும் காதுகளில் எண்ணெய் ஊற்றக் கூடாது. குழந்தையின் தொண்டையில் இருந்து சளி எடுப்பதாகக் கூறி சுத்தமில்லாத விரல்களை குழந்தையின் வாயில் வைக்கக் கூடாது. குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டக் கூடாது. குளிப்பாட்டியவுடன் புகைப்போடக் கூடாது.
  • குழந்தை சிறுநீர் மற்றும் மலம் கழித்தவுடன் சுத்தமான வேறு துணிகளை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
  • குழந்தையின் கை நகங்களை வெட்டிவிட வேண்டும். அது வாயில் வைக்கும் பொருட்கள் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அளிக்கும் உணவை மூடிவைத்து ஈ, பூச்சி ஆகியவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
  • குழந்தைக்கு உதட்டோடு உதடு சேர்த்து முத்தம் கொடுக்கக் கூடாது. ஜுரம் இருப்பவர்கள், இருமல் தும்மல் வரும்போது இரண்டு கைகளாலோ, கைக்குட்டையாலோ முகத்தைத் தவறாமல் மறைத்துக் கொள்ள வேண்டும்.


குழந்தை பராமரிப்பு

எனது கனவை  உனது விழியில்  எடுத்து வந்தாயே! தூக்கத்தில் எப்போதாவது தென்படும் அனிச்ச மலர் புன்னகை... தொட்டாற்சிணுங்கியைப் போன்ற அழுகை... உயிர் வரை பாய்ந்து சென்று திரும்பி வரும் குட்டி மீன்களாக அசையும் கண்கள்... மார்பின் கதகதப்பில் நீந்தி மகிழும் பூ உதடுகள்... இப்படி மொட்டு மலர்வதைப் போல ஸ்பரிசத்தால், அழுகையால், மெல்லிய அசைவுகளால் ஒவ்வொரு நொடியையும் அர்த்தமுள்ளதாக மாற்றுகிறது செல்லக்குட்டி. தாய்ப்பால் குடிக்க ஆரம்பித்து ஒரு மாதத்தில் அதன் முகத்தில் அத்தனை பட்டு ரோஜாக்கள்! மூடிய இமைகளின் மீது மெல்ல மெல்ல ஒரு பட்டுப்பூச்சியாக மாறி, அதன் மீது அமர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் கனவை நாமும் உணர முடிந்தால் எவ்வளவு அழகு! பாட்டியை, அப்பாவை, கணவனை, கணவனின் தங்கையை என அனைத்துத் தலைமுறையின் குட்டிக் குட்டிச் சாயல்களையும் ஒவ்வொரு கோணத்தில் இருந்து வெளிப்படுத்தும் அற்புதம் இதழ் விரிய விரிய வளர்வதைப் பார்ப்பதே பெரும் சுகம்!

பிறந்து ஒரு மாதம் வரை குழந்தை பராமரிப்பு குறித்தும், அந்தக் காலகட்டத்தில் ஏற்படும் அபாய அறிகுறிகள் குறித்தும் விளக்குகிறார் கோவை குழந்தைகள் நல மருத்துவர் நந்தினி குமரன்.  ''ஒரு தாய் அணு அணுவாக ரசித்து, விரும்பிப் பெற்றுக்கொள்வதாக குழந்தை இருக்க வேண்டும். அப்போதுதான் கருவின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும். ரத்த விருத்தி, கால்சியம், வைட்டமின் டி மாத்திரைகளை ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டால், பிரசவத்துக்குப் பின் தாய்க்கும் குழந்தைக்கும் சத்துக்குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம். குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் இது அவசியம்.  நார்மல் டெலிவரி முடிந்து, ஒரு மாதம் ஆன பிறகு வயிற்றுப்பகுதி பெருத்து விடுவதைக் குறைக்கவும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தாய்மைக் காலத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதற்கான மனநிலையை உருவாக்க வேண்டும். காம்பில் அடைப்பு இருக்கிறதா எனப் பார்த்து நிப்பிள் பயிற்சி செய்வது அவசியம். பால் கொடுக்கும் முறையை 'லேட்சிங் ஆன்' என்கிறோம். மார்பை எடுத்து குழந்தையின் வாயில் கொடுக்க வேண்டும். கீழ் உதட்டில் படும்படி காம்பு இருக்க வேண்டும். காம்பைச் சுற்றி இருக்கும் கருவளையம் 'ஏரியோலா' எனப்படுகிறது.

காம்புடன் ஏரியோலாவையும் குழந்தையின் உதடுகள் தொட்டுப் பிடித்துச் சப்ப வேண்டும். காம்பை மட்டும் சப்பினால் பால் சுரப்பு அதிகரிக்காது. பாலோடு குழந்தை சிறிது காற்றையும் உள் இழுக்கிறது. பால் குடித்து முடித்த பின், தோளில் போட்டு முதுகுப் பக்கத்தை நீவிக் கொடுத்தால் ஏப்பம் விடும்... அந்தக் காற்று ரிலீஸ் ஆகும். ஒரு மாதத்துக்கு தாய்ப்பால் தவிர தண்ணீர்கூட குழந்தைக்குத் தேவையில்லை. புட்டியில் எளிதாக சப்பினாலே பால் கிடைத்து விடும். தாய்ப்பாலுக்கு குழந்தை நிறைய உழைக்க வேண்டும். இதனால் குழந்தை புட்டிப்பாலுக்குப் பழகி விடும். பால் சுரப்பும் குறைந்து விடும். 6 மாதத்துக்குப் பின் மற்ற பால் சேர்த்தாலும், கப், ஸ்பூனிலேயே கொடுக்க வேண்டும்.  ஒன்றரை வருடம் வரை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதும் ஆரோக்கியமானதே. அதிக மாதங்கள் தாய்ப்பால் குடிக்கும்போது தாய்க்கும் குழந்தைக்குமான பாசப்பிணைப்பு அதிகமாக இருக்கும்.
 குழந்தை பனிக்குடத்தில் இருந்த போது 'வர்னிக்கல் காசியோசா' என்ற மாவு போன்ற படலம் ஒட்டியிருக்கும்.

அது தோலுக்குப் பாதுகாப்பு அளிப்பதால் முதலில் 'ஸ்பாஞ்ச் பாத்' செய்யப்படுகிறது. குழந்தையின் தொப்புள்கொடி விழும் வரை 'டவல் பாத்' எடுக்க வேண்டும். பின்னர் டப்பில் குழந்தையை வைத்து தாயே குளிப்பாட்டலாம். குளித்த பின் உடலில் உள்ள ஈரத்தை ஒற்றி எடுக்க வேண்டும். பவுடர் தேவையில்லை. சாம்பிராணி, தூபம் ஆகியவையும் தேவையில்லை. துவளைப்பொடி, பயத்தமாவு ஆகியவையும் கூடாது. குழந்தைகளுக்கான மென் சருமத்தை பாதிக்காத வகையில் குளியல் இருக்க வேண்டும்.  தொப்புள்கொடி 5 - 10 நாட்களில் விழுந்து விடும். அது வரை, டவல் பாத்துக்கு பிறகு, தொப்புள் பகுதியில் காட்டனில் ஸ்பிரிட் மட்டும் தொட்டு துடைக்க வேண்டும். ஆயின்மென்ட் தேவையில்லை.  குழந்தை பிறந்து 24 முதல் 48 மணி நேரத்துக்குள் சிறுநீர் கழிக்க வேண்டும். ஃப்ளோ நன்றாக இருக்க வேண்டும். விட்டு விட்டுப் போதல், சொட்டு சொட்டாகப் போதல், யூரின் போகும் போது அழுதல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் கவனிக்க வேண்டும். ஆரம்பத்தில் மூத்திரப்பையில் யூரின் சேரும் போது குழந்தைகள் அழலாம்.

யூரின் போன பின்னர் ஈரம் ஆனதற்காக அழலாம். இது சாதாரணம். முக்கியபடியே அழுதால் மருத்துவரிடம் கொண்டு வரவேண்டும்.
 ஒரு வாரத்தில் குழந்தையின் மலம் மெல்ல நிறம் மாறி முட்டையின் மஞ்சள்கரு போன்ற பொன் மஞ்சளுக்கு மாறும். சந்தனம் போல மாறிவிட்டால் பயப்படத் தேவையில்லை. வெளிறிய நிறத்தில் இருந்தால் கவனிக்க வேண்டும். ஒரு சில குழந்தைகள் பிறந்து 10 நாட்கள் வரை அரை மணி நேரத்துக்கு ஒரு முறை மலம் கழிக்கும். இது வயிற்றுப்போக்கு கிடையாது. ஒரு நாளில் ஒரு முறை அல்லது இரண்டு நாளுக்கு ஒரு முறையும் கழிக்க வாய்ப்புள்ளது. வயிற்றுப் பொருமல் ஏற்படாத வரை எந்தப் பிரச்னையும் இல்லை.  60 சதவிகிதம் பச்சிளம் குழந்தைகளுக்கு காமாலை வருகிறது. இது அடுத்த சில நாட்களில் சரியாகி விடும். ஆனால், கை, கால், பாதம், கண்கள், உடல் அதிக மஞ்சளாகத் தென்பட்டாலும் பல நாட்களுக்கு காமாலை தொடர்ந்தாலும் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.

ஒரு மாத குழந்தைகளுக்கு சளித்தொல்லை இல்லாமல் மூக்கடைப்பு ஏற்படலாம். மூக்கொழுகல் இன்றி ஏற்படும் மூக்கடைப்புக்கு நார்மல் சலைன் இரண்டு சொட்டு விட்டால் போதும். சரியாகி விடும். மூக்கடைத்துக் கொண்டால் வாயில் மூச்சு விடும் பழக்கம் குழந்தைகளிடம் இருக்காது. பால் குடிக்கும் போதும் மூச்சுவிட சிரமப்படும். மூக்கடைப்பு இருந்தால் பால் கொடுப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் மூக்கில் சொட்டு மருந்து விட வேண்டும்.   சில அபாய அறிகுறிகளும் உள்ளன. 24 மணி நேரத்துக்கு மேல் மலம் வராமல் இருத்தல், 48 மணி நேரத்துக்கு மேல் சிறுநீர் போகாமல் இருத்தல், ஒரு வாரத்துக்கு மேல் தொடரும் காமாலை, நன்றாகப் பால் குடித்து தூங்கும் குழந்தையிடம் காணப்படும் பழக்க மாற்றம், தூங்க சிரமப்
படுதல், 2 - 3 மணி நேரத்துக்கு மேல் தூங்குதல், பால் குடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பது, சமாதானப்படுத்த முடியாத அழுகை, மூச்சு விட சிரமப்படுதல், சிறுநீர், மலம் கழிக்கும் போது சிரமப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.

 குழந்தை பிறந்து வீட்டுக்கு வந்த பின், முதல் 15 நாட்களில் அதன் ஆரோக்கியம் குறித்து டாக்டரிடம் பரிசோதிக்க வேண்டும். பிறந்தவுடன் முதல் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைட்டிஸ் 'பி' முதல் டோஸ், பிசிஜி காசநோய் தடுப்பு மருந்து ஆகியவை போடப்பட வேண்டும்.
பிறந்து ஒரு நாள் முதல் ஒரு மாதம் வரை குழந்தைகளிடம் காணப்படும் அறிகுறிகள்தான் அதன் மொழி. பார்க்கவும் பேசவும் தெரியாத அந்தப் பிஞ்சை கண்ணும் கருத்துமாக கவனிப்பதன் மூலம் மட்டுமே அதன் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள முடியும்!'' என்கிறார் டாக்டர் நந்தினி குமரன்.
ஆசை ஆசையாய் பால் குடித்துவிட்டு அயர்ந்து உறங்கும் அந்த விழிகள் ஒவ்வொரு முறை விழிக்கும் போதும் புதிதாக மலர்கிறது. தூங்கும்போது அந்த இரண்டு விழி மொட்டுகளுக்குள் கனவின் விசும்பல் மெல்ல நிகழ்கிறது!

Source http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1520&cat=500

Friday, December 7, 2012

குழந்தை வளர்ப்பு

குழந்தை பிறந்தது முதல் 1 வயது வரை
குழந்தை பிறந்தவுடன் 6 மணி நேரத்திற்குள் சீம்பால் கொடுக்க வேண்டும். இந்த சீம்பால் எவ்வளவு முக்கியமேன்றரிய நாம் நம் கிராமத்துப்பக்கம் சென்றால் அறியலாம். இன்றும் நம் கிராமத்துப்பக்கம் பசு கன்று ஈன்றவுடன் கிடைக்கும் சீம்பால் சாது நிறைந்தது என்று பலரும் தேடிச்சென்று வாங்கிச் செல்வதைக் காணலாம். பசுவின் சீம்பால் அதன் கன்றுக்காக கடவுள் அளிப்பது. அது சத்து நிறைந்தது எனின் கடவுள் நம் குழந்தைக்காக நமக்களிக்கும் சீம்பாலும் சத்து நிறைந்ததே. ஆகவே சத்து நிறைந்த நம் குழந்தையின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சீம்பாலை நாம் கண்டிப்பாக நம் குழந்தைக்கு அளிக்க வேண்டும்.

அடுத்து வரும் 6 மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப் பால் போதவில்லை என்று கருதும் சமயத்தில் 3 மாதங்களுக்குப் பிறகு கேரட், பீட்ரூட், கோஸ், பீன்ஸ் போன்ற காய்கறிகளை நன்கு வேகவைத்து மிக்ஸ்யில் அரைத்து அந்தத் தண்ணீரை மட்டும் வடிகட்டி காலை 11 மணியளவில் கொடுக்கலாம். கண்டிப்பாக மாலையில் தர வேண்டாம்.

6 மாதங்களுக்கு பிறகு 11 மணி மற்றும் மலை 3 மணி ஆகிய நேரங்களில் நன்கு வேகவைத்து மசித்த காய்கறிகளை ஒரு வேளையும், பழங்களை ஒரு வேளையும் கொடுக்கலாம்.

9வது மாதம் முதல் காலையில் இட்லி, இடியாப்பம் ஆகியவற்றை நெய் சேர்த்து கொடுத்துப் பழகலாம்.

10வது மாதம் முதல் காலை டிபன் கொடுப்பதோடு மதியம் கொந்தம் சாதம் குழைத்து பருப்பு, நெய் ஆகியவற்றைக் கலந்து கொடுத்துப் பழக்க வேண்டும்.

11வது மாதம் முதல் காலை உணவுக்கு முன் கஞ்சி கொடுக்கலாம்.

முதல் முறை:- உடைத்த கடலை மாவை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெள்ளம் கலந்து கொடுக்கலாம்.

2வது முறை:- கோதுமை, ராகி, மக்காச்சோளம், உடைத்தகடலை,முந்திரி, கேழ்வரகு ஆகியவற்றை சம அளவு எடுத்து அவற்றில் உடைதக்கடலை தவிர்த்து மீதியை வறுத்து எல்லாவற்றையும் அரைத்து மாவு தயாரித்து அதில் நீர் கலந்து கொதிக்க வைத்து கஞ்சி தயாரித்துக் கொடுக்கலாம். இதிலும் மேற்சொன்னவாரே குழந்தையின் ருசிக்கேற்ப உப்பு (அ) சர்க்கரை (அ) வெல்லம் கலந்து கொடுக்கலாம்.

மேற்ச சொன்ன இரண்டு முறைகளிலும் பால் கலந்தும் கொடுக்கலாம்.

* குறிப்பு:- கஞ்சியை முதன் முதலில் குழந்தைக்கு அறிமுகப்படுத்தும்போது வெயில் காலமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் கஞ்சி குளிர்ச்சியைத் தரும். இதனால் குளிர்காலத்தில் அறிமுகப்படுத்தும்போது சளி பிடிக்கலாம்.

12வது மாதம் முதல் எல்லாவித உணவையும், காய்கறிகளையும் கொஞ்சம் நன்கு வேகவைத்து அறிமுகப்படுத்தவும்.

குழந்தைக்கு உணவளிக்கும் போது கவனித்தில் கொள்ள வேண்டியவை:-

புதிதாக அறிமுகப்படுத்தும்போது ஒன்றுக்கும் மட்ரொன்றிர்க்கும் இடைவெளி தேவை. அப்போது தான் எந்த உணவு குழந்தைக்கு ஒத்துகொள்ளவில்லை என்று நாம் அறிய முடியும். அந்த உணவை தவிர்த்து மட்ட்ரவற்றை கொடுக்க இயலும்.

குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ அல்லது அஜீரணக் கோளாறு ஏற்பட்டாலோ நாம் அறிமுகப்படுத்திய புதிய உணவு குழந்தைக்கு ஒத்துக்கொள்ளவில்லை என அறியலாம். மேலும் தரையில் இருந்து ஏதாவது பொருளை வாய்க்குள் போட்டுக்கொண்டாலும் வயிறு உபாதை ஏற்படலாம்.

குழந்தை குறைந்தது 5 முதல் 7 தடவைகள் மலம் கழிக்கணுலாம். அதற்க்கு மேல் மலம் கழித்தால் அருகில் உள்ள மருத்துவரை அகவும்.

மேலும் உடனே நாம் தினமும் அளித்துவரும் உணவை நிறுத்திவிட்டு பார்லி கஞ்சி (அ) நொய் கஞ்சி கொடுக்கவும்.

நொய் கஞ்சி:- சிறிது பச்சரிசி நொய்யை ஒரு அகலப் பாத்திரத்தில் அதிக தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். இந்த அதிகத் தண்ணீரை தண்ணீருக்கு பதில் குழந்தைக்கு கொடுத்து வரவும. கஞ்சியை உணவுக்கு பதில் கொடுக்கவும். வயிட்ட்ருபோக்கு ஓரிரு நாட்களில் உடனே சரியாகி விடும்.

இதுவரை நாம் கூறி வந்தவை குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு.

இனி மன ஆரோக்கியம் (குழந்தையின், அறிவுத்திறன் வளர பெற்றோர் செய்யவேண்டியவைகளைப் பார்ப்போம்.

முக்கியமானதும் நம்மில் பலர் செய்ய தயங்குகிற விஷயம் குழந்தையுடன் உரையாடுவது. நாம் பலரும் நினைப்பது போல் குழந்தை பொம்மை அல்ல. அதற்கும் எல்லாம் தெரியும். நாம் பேசும் அனைத்து விஷயங்களையும் குழந்தை கிரகித்துக் கொள்கிறது. ஆகவே குழந்தை பிறந்தது முதல் பெரியவரிடம் உரையாடுவது போல் உரையாடுங்கள்.

எடுத்துக்காட்டாக குழந்தை பால் குடிக்கும் முன் என்னடா செல்லம் பசிக்கிறதா? பால் குடிப்போமா? இப்ப அம்மா பால் தருவேனாம். சமத்தா பால் குடிச்சிட்டு விளையாடுவீங்கலாம். உன்னைப் பார்க்க எல்லோரும் வந்திருகிறார்கள். எல்லோரையும் பார்த்து சிரிப்பீர்கலாம். நீங்க சிரிச்சா எல்லோருக்கும் சந்தோஷமாம். என்னடா செல்லம் எல்லாரையும் சந்தொஷப்படுதுவீர்களா? சரி இப்ப பால் குடிப்போமா என்று குழந்தையிடம் உரையாடிக்கொண்டே பால் கொடுக்கலாம்.

இது போல் எபோழுதும் எது செய்தாலும் குழந்தையிடம் நாம் பேசிக் கொண்டே இருந்தால் குழந்தையின் கேட்கும் திறம் அதிகரிப்பதோடு குழந்தைக்கு பேச வேண்டும் என்ற ஆவலை தூண்டி குழந்தை சீக்கிரம்பேச ஆரம்பித்துவிடும்.

இவ்வாறு பேசிகொண்டே இருப்பதால் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் இடையே ஒரு அன்யோன்யம் பிறக்கும். இதனால் எதிர்காலத்திலும் எல்லாவற்றையும் உங்களிடம் உங்கள் குழந்தை பகிர்ந்து கொள்ளும். இது போதுமே உங்கள் குழந்தையை உங்கள் விருப்பம் போல் நல்லவர்களாக வளர்க்க.

6 மதங்கல்லுக்குப் பிறகு நீங்கள் பேசுவதோடு உலக அறிவையும் புகட்டுங்கள். இவை எவ்வாறு என்று ஒரு சின்ன எடுத்துக்காட்டின் மூலம் கீழே கூறியுள்ளேன். இவை குழந்தையின் ஆர்வத்தை தூண்டி நுட்ப்ப அறிவை -ஐ அதிகரித்து சீக்கிரம் பேச உதவுவதுடன், குழந்தை நல்ல அறிவாளியாக, கூர்மையான புத்திசாலியாக, ஞாபகசக்தி அதிகம் உள்ளவர்களாக மாறுவதை நீங்கள் கண் கூடாக காணலாம்.

குழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை

குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சி யான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து கொள்ளலாம்.

குழந்தை வளர்ப்பில் அடிப்படையான விஷயங்கள் இங்கே தரப்படுகின்றன.

பிறப்பு முதல் ஒரு வயது வரை:

பிறந்த குழந்தைக்கு தினமும் எத்தனை முறை பாலூட்ட வேண்டும் என்ற சந் தேகம் பல தாய்மார்களுக்கும் ஏற்படு கிறது. குழந்தை ஒவ்வொரு முறை அழும் போதும் பசியால்தான் அழுகிறதோ என்று நினைக்கிறார்கள்.

குழந்தைக்கு தேவையான அளவு உணவு கிடைக்கிறதா என்பதை அறிய பலவழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று குழந்தையின் எடையை கவனிப்பது. குழந்தை பிறக்கும்போது எவ்வளவு எடை இருக்கிறதோ, நாலு மாதத்தில் அந்த எடை இரட்டிப்பாக வேண்டும். பிறக்கும் போது 2.7 கிலோ என்றால், 5.4 கிலோவாக இருக்க வேண்டும். தேவையான அளவு பால் கிடைத்தால், குழந்தையின் எடை இந்த அளவு அதிகரித்து விடும். குழந்தை யின் சிறுநீர் அளவு, மலத்தின் அளவைப் பார்த்தும் தேவையான அளவு பால் கிடைப்பதை உறுதி செய்து விடலாம்.

பிறந்த குழந்தைகளை தாயே பயமின்றி குளிப்பாட்டலாம். முதலில் `பேபி ஆயில்' பயன்படுத்தி உடலை வருடி விடுங்கள். அம்மாவின் வருடல் குழந்தைக்கு ஆனந் தத்தை அளிக்கும். `மசாஜ்' மூலம் குழந்தையின் உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

ஒரு சிறிய பிளாஸ்டிக் `பேசினில்' கால் பாகத்திற்கு குளிர் நீக்கிய (லேசாக சூடான) நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அம்மா தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். குழந்தையின் தலை இடது கையில் வருவதுபோல தூக்கிப் பிடிக்க வேண்டும். முதலில் குழந்தையின் உட லில் `பேபி சோப்' தேய்த்து கழுவவேண் டும். அதற்குப் பிறகு தலையையும் முகத்தையும் கழுவுங்கள். கழுவும்போது தலையை உத்தேசமாக 30 டிகிரி கோணத் தில் தூக்கிப் பிடித்துக் கொள்ள வேண் டும். குழந்தையின் மூக்கினுள் தண்ணீர் சென்று விடக்கூடாது.

குளிப்பாட்டிய உடன் தலையை துவட்ட வேண்டும். உடலை துடைக்கும்போது காதுகளின் உள் பகுதியில் இருக்கும் ஈரத்தை தவறாமல் துடைத்து விட வேண் டும். மூக்கை மேல் இருந்து கீழாக லேசாக அழுத்தி, அங்கிருக்கும் தண்ணீரையும் அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகு பவுடர் பூசி துணி அணிவிக்க வேண்டியது தான். குளியல் முடிந்ததும் குழந்தைக்கு பசி எடுக்கும் பால் கொடுத்து தூங்க வைத்து விடலாம்.

சில குழந்தைகள் தூங்கும்போது, சுவாசத்தில் மூக்கில் இருந்து லேசான ஒலி எழும். மூக்கு, தொண்டைப் பகுதியில் ஏற்படும் லேசான தடையாலே இந்த ஒலி ஏற்படுகிறது. மூக்கில் இரண்டு துவாரம் உண்டு. அதில் ஒன்று சிறிதாக இருந்தால், சுவாசிக்கும்போது சத்தம் வரும். குழந்தை வளரும்போது, துவாரமும் பெரிதாகி இந்த குறை நீங்கி விடும்.

பால் குடிக்கும் குழந்தையாக இருந் தால், பால் இந்த துவாரத்தில் ஏறி இருந் தாலும் சுவாசிக்கும்போது சத்தம் வரும். இது ஒரு பிரச்சினையாகத் தோன்றினால், குழந்தைகள் நல மருத்துவரிடம் காட்ட வேண்டும்.

இரவு நேரத்தில் சில குழந்தைகள் தொடர்ச்சியாக அதிக நேரம் அழும். பசி, வயிற்று வலி, மலச்சிக்கல், உஷ்ணம், சிறுநீர் கழித்தலால் ஏற்பட்ட ஈரத்தன்மை, கொசுக்கடி, இறுகிய ஆடை, குளிர்… போன்ற ஏதாவது காரணம் இருக்கலாம். அறையில் தேவையான காற்று கிடைக்கா விட்டாலும், அதிக அளவு பால் குடித்து விட்டாலும் கூட குழந்தைகள் அழலாம்.

ஒரு வயதான குழந்தைக்கு இரவில் பால் கொடுக்கலாமா? என்ற கேள்வியை பலரும் எழுப்புகிறார்கள். தூங்கச் செல் லும் போது குழந்தைக்கு `பாட்டிலில் பால்' கொடுக்காமல் இருப்பது நல்லது. கொடுத் தால் குழந்தையின் பல் சேதமாகக் கூடும். இரவு உணவு கொடுத்து விட்டு குழந் தைக்கு ஒரு கப் பால் கொடுங்கள். அதற் குப் பிறகு ஒரு கப் தண்ணீர் கொடுங்கள். இதன் மூலம் வாயில் இருக்கும் பாலின் தன்மை கழுவப்பட்டு விடும்.

சைவ உணவு சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சைவ உணவை சாப் பிடும் பழக்கம் கொண்டவர்கள் குழந் தைக்கு அசைவ உணவு கொடுத்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. பால், தயிர், வெண்ணை போன்ற பால் வகைப் பொருட்களை கொடுக்கலாம். பயிறு வகை களை உணவில் சேர்த்தால், குழந்தைக்கு தேவையான புரோட்டீன் சத்து கிடைத்து விடும்.

2 முதல் 3 வயது வரை:

இரண்டு வயதான பிறகும் குழந்தை ஒரு சில வார்த்தைகள்தானே பேசுகிறது -என்று 75 சதவீத பெற்றோர் குறிப்பிடுகிறார்கள். இந்த குழந்தைகளுக்கும் பேச்சுத்திறன் அதிகரிக்கவே செய்யும். அப்பா-அம்மா பேசுவதை பார்த்தும் கேட்டும்தான் குழந்தைகள் பேசத் தொடங்குகின்றன. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல் பவர்களாக இருந்தால், குழந்தைக்கு அவர்களோடு செலவிடும் நேரம் மிகக் குறைவாக இருக்கும். இந்த மாதிரி குழந்தைகள் தாமதமாகத்தான் பேசும். குழந்தை சரியாக பேசவில்லை என்பதை உணர்ந்தால், `ஸ்பீச் தெரப்பிஸ்ட்'டிடம் ஆலோசனை பெறவேண்டும்.

குழந்தைகள் விரல் சப்புவது சகஜமான விஷயம். அதை நிறுத்துவதற்காக அடிப் பதோ குற்றஞ்சாட்டுவதோ கூடாது. இந்த வயதில் குழந்தைகள் கிடைப்பதை எல் லாம் வாயில் வைக்கும் பழக்கம் கொண் டவை. அந்த அடிப்படையில்தான் விரலை யும் வாயில் வைத்து சப்புகிறது. பயத்தின் மூலமும் சில குழந்தைகள் விரலை சப்பும். குறிப்பிட்ட வயதில், இந்த பழக்கம் நீங்கி விடும்.

இரண்டு வயது குழந்தைகள் 9-10 மணி நேரமாவது உறங்கும். சில குழந்தைகள் அதிக நேரம் தூங்காது. அதற்கு அறை யின் உஷ்ணம், சத்தம், கொசுக்கடி போன்ற ஏதாவது காரணமாக இருக்கும். குழந்தை சற்று குறைவான நேரமே தூங்கி னாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

குழந்தைகள் மூன்று, நான்கு நாட்க ளுக்கு ஒருமுறை மலங்கழிக்கும். சில நேரங்களில் பச்சையாகவும் மலம் வெளி யேறும். இதற்கு பல காரணங்கள் உண்டு. சில குழந்தைகளுக்கு மலம் வெளியேறும் போது வலி ஏற்படும். அதற்கு பயந்து மலம் கழிக்காமலே இருந்து விடும். அவ்வாறு செய்தால் வயிற்றில் மலத்தின் அளவு அதி கரித்து அதிக வலி தோன்றும். இது மலச் சிக்கலாகி விடும். இந்த நிலை ஏற்பட்டால் டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும். ஒரு சில நேரம் பச்சை நிறத் தில் வெளியேறினால் பிரச்சினை இல்லை. தொடர்ச்சியாக பச்சை நிறத்தில் இருந் தாலோ, வயிற்றை இளக்கிச் சென்றாலோ டாக்டரிடம் காட்ட வேண்டும்.

குழந்தைகள் டி.வி. பார்ப்பது தவறல்ல. ஆனால் போதிய இடைவெளியில் அமர்ந்து பார்க்கா விட்டால், கண்களைப் பாதிக்கும். குழந்தைகளிடம் விளையாட்டு ஆர்வத்தை உருவாக்க வேண்டியது மிக அவசியம். அந்த ஆர்வத்தைக் கெடுத்து டி.வி. முன்னாலே உட்கார வைத்து விடுவது சரியல்ல.

இந்த பருவத்து குழந்தைகள் சிலவற்றி டம் மண் தின்னும் பழக்கம் ஏற்பட்டு விடும். உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், மண்ணைத் தின்னும். அந்த சத்தை ஈடுசெய்ய வேண்டும். டாக்டரிட மும் காட்டி ஆலோசனை பெறலாம்.

குழந்தைகள் பெரும்பாலும் மருந்து குடிக்க மறுக்கவே செய்யும். அதனால் மருந்து கொடுக்கும்போது அவைகளு டைய கவனத்தை விளையாட்டின் பக்கம் திருப்பி விட வேண்டும். விளையாட்டு காட்டியபடியே கொடுத்து விடலாம். வற்புறுத்தி திணிப்பது சரியல்ல.

குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள் வாங்கிக் கொடுக்கும்போது அவை பளபளப்பாகவும், விலை உயர்ந்த தாகவும் இருந்து எந்த பலனும் இல்லை. குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை தூண் டும் விதத்தில் அது இருக்கவேண்டும். சப்பாத்தி மாவை சிறிதளவு பிசைந்து கொடுத்து பலவிதமான உருவங்கள் செய் யச் சொல்லலாம். பேப்பர்களை மடக்கி, விமானம், கப்பல் போன்றவைகளை உருவாக்கச் செய்யலாம்.

4 முதல் 10 வயது வரை:

இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி யும், கற்பனைத் திறனும் அதிகரிக்கும். அதனால் வீட்டுச் சுவர்களில் இஷ்டத்திற்கும் கோடு போட்டு படம் வரைவார்கள். இது ஊக்கு விக்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனாலும் வீடு முழுவதும் எல்லா சுவர்களிலும் வரைவது வரவேற்கத் தக்கதல்ல. ஏதாவது ஒரு சுவரில் வரையச் சொல்லுங்கள் அல்லது அதற்கென்று கரும் பலகை ஏதாவது வைத்துக் கொடுத்து விடுங்கள்.

பள்ளிக்கூடத்திற்குச் செல்ல சில குழந்தைகள் அடம்பிடிக்கும். அப்போது குழந்தைகளை அடிக்காமலோ, மிரட்டாமலோ, அவைகளுக்கு ஏன் பள்ளிக்கூடம் பிடிக்கவில்லை என்பதை மனரீதியாக ஆராய வேண்டும். உடன் படிக்கும் குழந்தைகள் தரும் மனோரீதியான தொல்லை, உடல்ரீதியான தொல்லை, ஆசிரியர்களின் மிரட்டல் அல்லது ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனை, பாடல் களை புரிந்து கொள்வதில் ஏற்படும் பிரச் சினைகள் போன்ற பல காரணங்களால் குழந்தைக்கு பள்ளிக்கூடம் பிடிக்காமல் போகலாம்.

இப்போது 5, 6 வயது சிறுவர் -சிறுமியர் தினமும் அதிக நேரம் கார்ட்டூன் சேனல் களைப் பார்த்து பொழுதுபோக்குகிறார் கள். அதிக நேரம் அவர்கள் டி.வி. பார்ப்பது கண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் கெடு தல் ஏற்படுத்தும். அதனால் விளையாட்டு, இதர பொழுதுபோக்குகளில் சிறுவர் களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்துங்கள்.

பல பெற்றோர், தங்கள் குழந்தைகள் போதுமான அளவு உணவு உண்பதில்லை என வருத்தப்படுகிறார்கள். தினமும் இட்லியையும் தோசையையும் கொடுத்தால், குழந்தைகளுக்கு வெறுப்பு ஏற்படத்தான் செய்யும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் சக மாணவ-மாணவிகள் மூலம் விதவிதமான உணவுகளைப் பார்க்கிறார்கள். அதனால் தங்கள் வீடுகளிலும் நிறத்திலும், சுவை யிலும் வித்தியாசமுள்ள உணவுகளை எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட உணவு களை கொடுக்கும்போது குழந்தைகள் தாராளமாக உண்ணவேச் செய்யும்.

இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும்போது சிறுவர் சிறுமிகளிடம் என்ன கலை ஆர்வம் இருக்கிறது என்பது தெரிந்து விடும். பாடும் ஆற்றல் இருப்ப தாக உணர்ந்தால், அதற்கான பயிற்சிக்கு ஏற்பாடு செய்து கொடுங்கள். அதுபோல பல்வேறு போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வத்தை உருவாக்கி கொடுங்கள். அவன் விரும்பும் போட்டிகள் டி.வி.யில் நடப்பதை பார்க்க வாய்ப்பு கொடுங்கள். முக்கியமாக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அக்கறை செலுத்தச் செய் யுங்கள்.

சிறுவர்-சிறுமியர்களிடம் பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். பெற்றோரின் அணுகு முறையால்தான் பிடிவாதம் கூடவோ, குறையவோ செய்யும். குழந்தை கள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுத்து விடக்கூடாது. குழந்தைகள் வளர வளர அதன் தேவைகள் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனால், தேவை யான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுங்கள். ஒரே குழந்தையை வளர்க் கும் பலரும் `நாங்கள் சம்பாதித்து வைப் பது சேர்த்து வைத்திருப்பது எல்லாம் உனக்குத்தான். அதனால் நீ எதைக் கேட்டாலும் வாங்கித் தருவோம்' என்ற மனோபாவத்தில் இருக்கிறார்கள். இது தவறான அணுகுமுறையாகும். குழந்தை களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்.

http://books.google.co.in/books?id=DPOC1D0ImZsC&lpg=PT51&pg=PT51#v=onepage&q&f=false

Wednesday, November 21, 2012

பரோட்டா


பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!! தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடுகிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே . பரோட்டாவின் கதை என்ன தெரியுமா பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்? மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.  இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .  மைதா எப்படி தயாரிகிறார்கள் ?  நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .   Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .   இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .   இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .  மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .   இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.  Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .   மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு . நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.   இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.  நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் . இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் . நன்றி -https://www.facebook.com/pages/உலக-தமிழ்-மக்கள்-இயக்கம்/210804085646629?sk=wall
பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை !!!!!!!!!!!!!
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணபடு
கிறது பரோட்டா கடை ,அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு
விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே .
பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக பற்ற கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா .


Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .


இது தவிர Alloxan என்னும் இரசாயனம், மாவை மிருதுவாக கலகபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபயகரமகுகிறது .


இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைபதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சிரண சக்தியை குறைத்து விடும் .


இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உன்ன தவிர்பது நல்லது.

Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .


மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.


இப்போது ஆவது நாமும் விழித்து கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, கேள்வரகு ,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு செய்யுங்கள் .

நன்றி -https://www.facebook.com/pages/உலக-தமிழ்-மக்கள்-இயக்கம்/210804085646629?sk=wall

Saturday, September 22, 2012

குழந்தைகளுக்கு அடிக்கடி என்னென்ன நோய் வருன்னு தெரிஞ்சுக்கோங்க...

வீட்டில் குழந்தைகள் இருந்தாலே வீடே கலகலப்பாய் இருக்கும். ஏனெனில் குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி, மகிழ்ச்சியில் நனைய வைப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக் குழந்தைகள் நோய்களில் பாதிக்கப்படும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும். மேலும் சில குழந்தைகள் திடீரென்று அழத் தொடங்கும். ஆகவே அவ்வாறு குழந்தைகளை என்ன நோய்கள் அடிக்கடி தாக்கும் என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு, குழச்தைகளை அவஸ்தையிலிருந்து தடுக்கலாமே!!!

 

வயிற்றுப்போக்கு: குழந்தைகள் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் வயிற்றுப்போக்கு தான் முதலில் இருக்கிறது. ஏனெனில் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் ஏதேனும் அவர்களுக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலோ, செரிமானமின்மையினாலோ வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. எனவே அவர்கள் வயிற்றில் கிருமிகள் சென்று வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகின்றன. ஆகவே அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு சர்க்கரை மற்றும் உப்பை நீரில் கலந்து கொடுத்து வந்தால், உடலில் இருக்கும் கழிவுகளை கிருமிகளை அழித்து வெளியேற்றி, வயிற்றுப்போக்கை நிறுத்திவிடும். ஆனால் அதுவே நிற்கவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

 

காய்ச்சல்: சில குழந்தைகள் அடிக்கடி காய்ச்சலுக்கு பாதிக்கப்படுவார்கள். இந்த காய்ச்சல் அதிக குளிர்ச்சி, தொற்றுநோய் அல்லது அதிகமான கிருமிகள் உடலில் இருப்பதால் ஏற்படும். நிறைய பெற்றோர்கள் சில நேரத்தில் காய்ச்சல் வந்தால், வீட்டில் இருக்கும் காய்ச்சலுக்கான மாத்திரைகளை கொடுத்து சாதாரணமாக விடுகின்றனர். அவ்வாறு விட்டால், அந்த கிருமிகள் உடலில் அதிகம் இருந்து, பின்னர் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் அந்த காய்ச்சல் 100 டிகிரிக்கு மேல் இருந்தால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

 

ஜலதோஷம்: குழந்தைகளுக்கு அணிவிக்கும் டயபர்களால் கூட குழந்தைகளுக்கு ஜலதோஷம் ஏற்படும். சில நேரங்களில் அதில் உள்ள தொற்றுநோய்களால் மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை அப்படியே நீடித்தால், குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. ஆகவே குழந்தைகளுக்கு டயபர் அணிவிக்கும் போது அடிக்கடி மாற்ற வேண்டும்.

 

வயிற்று பிரச்சனை: குழந்தைகளின் சுட்டித்தனத்தால் அவர்கள் அதிகமான வயிற்று பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். அதாவது வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்று எரிச்சல், செரிமானமின்மை போன்றவை அதிகம் வரும். ஏனெனில் குழந்தைகள் எதைக் கண்டாலும், அதை உடனே வாயில் எடுத்து வைத்துக் கொள்கின்றனர். அதனால் அதில் இருக்கும் கிருமிகள் வயிற்றில் சென்று, பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மேலும் அவ்வாறு வயிற்று பிரச்சனை இருக்கும் போது, லேசான காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

அரிப்புகள்: டயபரை குழந்தைகளுக்கு அணிவிப்பதால், அதில் உள்ள கிருமிகள் குழந்தைகளுக்கு அந்த இடத்தில் அதிகமான அரிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சரும நோய் ஏற்படுகிறது. ஆகவே எப்போதும் குழந்தைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

 

மேற்கூறிய நோய்கள் எல்லாம் வந்தால், சாதாரணமாக நினைக்க வேண்டாம். மேலும் இத்தகைய பொதுவான நோய்களுக்கான ஏதேனும் அறிகுறிகள் குழந்தைகளுக்கு ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது.

 http://retham.com/morearticaln.php?cat=news&id=15039


Thursday, August 23, 2012

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடறது பற்றி உங்களுக்கு தெரியுமா.....

குழந்தைகளுக்கு தடுப்பூசி போடறது பற்றி உங்களுக்கு தெரியுமா.....

15:36:33

Wednesday

2012-08-22

நமது செல்லக் குழந்தைகளை பெற்றெடுப்பது மட்டும் கடமை அல்ல. அதன் பின்பு குழந்தைகளை பாதுகாப்பது மிக முக்கியம். குறிப்பாக எந்த காலத்தில் எந்த மாதத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் தோழிகளே.. 

குழந்தை பிறந்தவுடன்: காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஒன்றரை மாதத்தில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

மூன்றரை மாதத்தில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான்கரை மாதத்தில்
: போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தரை மாதத்தில்: போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒன்பதாவது மாதத்தில்: தட்டம்மை தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து

ஒன்றே கால் வயதில்: தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பூசி

ஒன்றரை வயதில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி)

நாலரை வயதில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து.

இவை அனைத்தும் காலம் தவறாமல் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தான் முறையாக வழங்கவேண்டும். மறந்துடாதீங்க பெற்றோர்களே...


http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1505&cat=500

Sunday, July 22, 2012

உடல் வறட்சியாக இருந்தால், பிரசவம் சிக்கலாகிவிடுமாம்!!!

கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 10-12 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அப்போது தான் உடலில் நீர்ச்சத்தானது அதிகம் இருந்து, பிரசவமானது எளிதாக இருக்கும். அவ்வாறு இல்லாமல் உடல் வறட்சியாக இருந்தால் அந்த பிரசவமானது சிரமமாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது தண்ணீர் குடிக்காமல் இருந்தால் உடலில் ஒரு சில மாற்றங்களும் தெரியும் என்றும் சொல்கின்றனர்.

மேலும் தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றாலும் ஒரு டம்ளர் பழ ஜூஸ் ஆவது குடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருக்கும் சக்தியானது, கர்ப்பமாக இருக்கும் போது இருக்காது. ஏனெனில் அப்போது உண்ணும் அனைத்துமே கருவில் இருக்கும் குழந்தைக்கு செல்லும். மேலும் சில காரணங்களாலும் சக்தியானது வெளியேறும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். சரி, பிரசவத்தின் போது உடல் வறட்சியாக இருந்தால் என்னென்ன சிரமங்கள் வரும் என்று மருத்துவர்கள் சொல்வதைப் பார்ப்போமா!!!

கைகால் ஊனம் : பிரசவத்தின் போது உடலில் இரத்தத்தின் அளவு அதிகரித்து, உடலில் இருக்க வேண்டிய நீர்மத்தன்மையுள்ள பொருளை நீண்ட நேரம் தக்க வைக்க முடியாமல் போய்விடும். மேலும் கருப்பையில் இருக்கும் ஆம்னியான் நீர் குறைவாக இருந்தால், கருவில் இருக்கும் குழந்தையானது கருப்பையில் இருக்க முடியாமல், விரைவில் வெளியே வந்துவிடும். இந்த நிலையிலேயே குறைபிரசவம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைக்கு கைகால் ஊனம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது.

மூளைக்குறைபாடு : சாதாரணமாக இருக்கும் போது உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது, பிரசவத்தின் போது வெளியேறாது உடலிலேயே தங்கிவிடும். இதற்கு காரணம் நீர்ச்சத்து உடலில் இல்லாததே. ஆகவே உடலில் உள்ள வெப்பத்தை சரியாக வைக்க அதிகமாக தண்ணீரானது குடிக்க வேண்டும். மேலும் அவ்வாறு வெப்பம் உடலிலேயே இருந்தால் காய்ச்சல் வருவது போல் இருக்கும், அப்போது அந்த காய்ச்சலானது குழந்தைக்கும் வரும். இந்த நிலை முடிவில் குழந்தையின் மூளையை பாதித்து மூளைக்குறைபாட்டை ஏற்படுத்தும்.

மற்ற பக்கவிளைவுகள் : உடல் வறட்சியானது மலச்சிக்கல் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியில் குறைபாடு போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் சிறுநீரகத்தில் பிரச்சனையை உண்டுபண்ணும். அதுமட்டுமல்லாமல் தாய்க்கு பாதிப்பை ஏற்படுத்துதை விட குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரலையும் பாதிக்கும். மேலும் தாயின் உடலில் இரத்தக் குறைபாட்டை ஏற்படுத்தும். சொல்லப்போனால், தாய், சேய் இருவருக்குமே மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

ஆகவே 'ஒரு தையல் ஒன்பது கிளிசல்களை தடுக்கும்' என்னும் பழமொழிக்கேற்ப, முதலிலேயே உடலை சரியாக முறையாக பராமரித்து, பாதுகாத்து வந்தால் தாய் சேய் ஆகிய இரு உயிருமே நலமோடு ஆரோக்கியமாக இருக்கலாம்.

எனவே தண்ணீரை அதிகமாக குடிங்க!!! குழந்தையை ஆரோக்கியமா பெற்றெடுங்க!!!

Saturday, July 21, 2012

குங்குமப்பூவும் கருப்பு திராட்சையும்: கர்ப்பகால நம்பிக்கை

கர்ப்பகாலத்தில் என்ன உணவு சாப்பிடலாம் என்பதைப்பற்றி பலரும் பலவிதமாக கூறுவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் இடையில் இருப்பவர்களின் அட்வைஸ்க்கு அளவிருக்காது. எல்லாவற்றையும் கேட்டால் நமக்கு குழப்பம்தான் மிஞ்சும். குங்குமப்பூ சாப்பிடு குழந்தை சிவப்பா பிறக்கும், கருப்பு திராட்சை சாப்பிடாதே குழந்தை கருப்பாயிடும் என்றெல்லாம் கூறுவார்கள். இதெல்லாம் உண்மையில்லை மூடநம்பிக்கைதான் என்று கூறுகின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.கர்ப்பகாலத்தில் பழங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சத்து கண்டிப்பாக இருக்கிறது. கருப்புத் திராட்சை சாப்பிடுவது நல்லதுதான் என்று கூறும் மருத்துவர்கள் அதற்கான காரணத்தை முன்வைக்கின்றனர். கருப்புத் திராட்சையில் வைட்டமின் `ஏ' மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண் கருப்பு திராட்சை சாப்பிடுவது குழந்தைக்கும் நல்லது, அந்தத் தாய்க்கும் நல்லது. இப்பழத்தில் போலிக் அமிலமும் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. எனவே கர்ப்பிணிப் பெண்களுக்கு கருப்புத் திராட்சை குறித்த அச்சம் வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

கர்ப்பகாலத்தில் பாலில் குங்குமப்பூ சாப்பிடுவதால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது இதுவும் உண்மையில்லையாம். குங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. கரு உருவாகும் பொழுதே குழந்தையின் நிறம் மற்றும் இதர பண்புகளுக்கு,ஜீன்களே முக்கிய காரணம்.

அதேசமயம் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. குங்குமப்பூவில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, அதனை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். உடல் வலுப்பெறும். ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.

மேலும் குங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.

Source : http://www.retham.com/morearticalm.php?cat=news&id=8183


Monday, July 16, 2012

10 Steps To A Healthy Pregnancy

10 Steps To A Healthy Pregnancy

1. Organise your antenatal care early in your pregnancy:
Good antenatal care is essential to your baby's health. Choosing your doctor early means you'll have months to build a good relationship before your baby is born.

When choosing your doctor, get recommendations from friends and family. A good doctor is one who is able to give you personalised care, encourages you to ask questions, treats you with respect and answers all your queries patiently. Ideally, choose a doctor with a clinic close to your home. You might need to reach them quickly in an emergency, so it's a good idea to have their mobile number close at hand.

2. Eat well:
There's no need to 'eat for two' when you're pregnant. You may well need an extra 200-300 calories each day, but this is equivalent to:

a couple of slices of wholemeal toast and margarine/butter
two chapattis or idlis
a jacket potato with a small amount of cheese
one slice of cheese on toast
a serving of upma or poha
an extra glass of milk.

It is important to eat a balanced and healthy diet. You might go off certain foods, but it's always possible to swap these with others of similar nutritional value.

Aim to eat a diet with plenty of vegetables and fruit, and some carbohydrates such as roti, bread and rice (preferably wholegrain). You also need protein - this could be fish, meat, eggs, nuts or pulses.

Have some milk and dairy foods every day, such as milk, yogurt, ice cream, buttermilk and cheese. However, if you are lactose-intolerant, choose other calcium-rich sources, such as chickpeas, kidney beans, oats, almonds, soymilk and tofu.

You might find it better to eat five or six small, well-balanced meals a day rather than three larger meals. Don't skip any meals if you can help it.

Keep yourself well hydrated by drinking at least eight to ten glasses of water every day. Avoid caffeinated and artificially flavoured drinks and have fresh fruit juices, soups, and milk.


3. Be careful about food hygiene:
It is better to avoid certain foods in pregnancy because they carry an infection that can be a health risk for your baby.

Listeria, is an infection that can cause miscarriage or severe illness in newborns.

The listeria organism may be present in raw milk, non-pasteurised milk, raw meat and unwashed vegetables. So buy pasteurized milk, cook meat well and wash vegetables carefully. Refrigeration does not stop the growth of listeria.

Toxoplasmosis, is a parasite. It is rare, but can seriously affect an unborn baby. It is found in raw and undercooked meat and in soil and cat faeces. So make sure that meat is well cooked. Wash vegetables and salads to remove any traces of soil or dirt. If you have a cat, ask someone else to clear up any cat mess. Salmonella is a food poisoning bacteria. It does not harm your baby, but may make you feel very unwell. Salmonella can be found in undercooked poultry, and raw or soft-cooked eggs. So cook poultry well, and cook eggs until they are hard.

Try to eat freshly prepared meals whenever possible. If you do have a ready meal, check the best before date and that the packaging is not damaged. It's also worth checking the nutritional value and the list of ingredients, as there may be additives or preservatives that are unsuitable for pregnant women. MSG, for example, may trigger headaches, nausea and vomiting in sensitive individuals, although there is no evidence that it is harmful to a developing baby. Any packaging that is bloated, leaking or damaged, indicates potential risks of contamination.

In a warm humid country like ours, good food hygiene is especially important to make sure the food you eat is safe. Ensure all food is cooked well. But even cooked food stored in the refrigerator overnight can be contaminated. Try to avoid leftovers. Buy perishables daily and, when buying processed and convenience foods, always check the 'best before' and expiry dates. Keep cooked food covered and refrigerate within two hours of cooking.

Be very careful when eating out. A glass of fresh juice or a fruit chaat from a roadside vendor may seem inviting but may be contaminated. It's best to avoid golguppas and aloo tikkis, even at popular eating places, as you can't be sure they have been prepared under hygienic conditions. If you have paid help, ensure that she washes her hands thoroughly before preparing food.


4. Take folic acid supplements:
Folic acid (also called folate) is the only supplement that is considered vital. It can help prevent spina bifida and other neural tube defects in babies.

Spina bifida is a serious congenital condition affecting the central nervous system that can cause severe disabilities. All women planning a pregnancy are advised to take a daily supplement of 400mcg of folic acid starting around the time of conception and continuing through the first three months of pregnancy.

You can also increase your intake of natural folate through your diet. Folate is found invegetables like spinach, peas, lady's finger, lettuce, beans and capsicum as well as in fortified breakfast cereals.

Other nutrients that are important to your health and your baby's are iron and calcium, which can generally be provided by your diet. Leafy greens, such as spinach (palak), mustard leaves (sarson), methi, mint (pudina), coriander (dhania), radish (moolie) and raisins are rich sources of iron. Try sipping lemonade (nimbu pani) with your food as the vitamin C in the lemon helps iron absorption. You could squeeze lemon onto your salads as well..

Calcium-rich foods are milk, cheese and tinned sardines (with bones), soy milk, tofu, leafy green vegetables, sesame seeds, kidney beans, chickpeas, nuts and oats. If you think yourdiet may lack calcium, speak to your doctor who may prescribe a suitable calcium supplement.

Fish oils have been found to have a beneficial effect on birth weight and on the development of brain and nerves in late pregnancy. Try to eat oily fish such as herring (bhing machli), mackerel (bangda), salmon (raawas) or sardines (chareeaddee) two or three times a week. If you're not keen on fish, you could take fish oil supplements (choose a brand free of the retinol form of vitamin A). But talk to your doctor before taking any over-the-counter medications or herbal remedies.


5. Exercise regularly:
A good exercise programme can give you the strength and endurance you'll need to carry the weight you gain during pregnancy and to handle the physical stress of labour. It will also make it easier to get back in shape after your baby is born.

Exercise can boost your spirits and help ward off the pregnancy blues. A recent study found that staying active can boost your level of serotonin, a brain chemical linked to mood.

If you're used to taking exercise in the form of a sport, you can continue with this as long as it feels comfortable for you, unless your particular sport carries a risk of falls or knocks. More gentle exercise such as walking, swimming, aqua-aerobics, and yoga are also very beneficial.

Make sure you check with your doctor before starting any exercise routine.

In summer, walk in cool, shaded areas and stay indoors when it is very hot. Wear comfortable, loose clothing, suitable walking shoes and a well-fitting, supportive bra.

Learning some breathing exercises now will help you when your baby is born. They might help you to control your breath and your stress levels during labour.


6. Begin doing pelvic floor exercises:
The ideal time to begin pelvic floor exercises is adolescence, but many women don't hear about them until pregnancy.

The pelvic floor muscles are the hammock of muscles at the base of your pelvis that support the bladder, vagina and rectum. They can be weakened by pregnancy because of the extra pressure on them, and because the hormones of pregnancy cause them to slacken slightly.

You can strengthen your pelvic floor by doing daily exercises. Try and do them frequently throughout the day - when you wash your hands, brush your teeth, or wait for the kettle to boil.


7. Limit your alcohol intake:
Because any alcohol you drink rapidly reaches your baby via your bloodstream and placenta, you may decide to cut it out completely, or at least to monitor the amount you consume.

Pregnant women should drink no more than eight units of alcohol per week, and no more than two units at any one time. Women who have more than two drinks a day are at greater risk of giving birth to a baby with fetal alcohol syndrome (FAS). Children born with FAS suffer from mental and growth retardation, behavioural problems, and facial and heart defects.


8. Cut back on caffeine:
Coffee, tea and cola-style beverages are mild stimulants, and some research suggests that too much caffeine may increase the risk of having a low-birth-weight baby.

The current advice is that two cups of coffee or tea per day (or up to five cans of cola) won't hurt your baby.

You may prefer to switch to decaffeinated coffee or tea, or drink fruit juices instead. A refreshing alternative is a glass of mineral water with a twist of lime or lemon or tender coconut water. You could also drink fresh fruit or vegetable juices as they contain plenty of vitamins and minerals for you and your baby.

9. Stop smoking:
Women who smoke increase their risk of miscarriage, premature delivery, stillbirth and cot death.

Some studies have shown that women who smoke 20 or more cigarettes a day during pregnancy are more likely to give birth to a baby with a cleft lip or palate.

While it is best to give up smoking before you even try to conceive, any reduction in the number of cigarettes you smoke per day will give your baby a better chance.

It is best not to be exposed to cigarette smoke at all. Encourage your husband to give up as well, or at least to avoid smoking inside the house. Tell visitors and relatives that your home is a 'no smoking' zone.


10. Get some rest:

The fatigue you feel in the first and third trimesters is your body's way of saying 'slow down'. A nap in the middle of the day may seem like a luxury you can't afford, but you and your baby will both benefit. Take any offers of help. To make sure you get enough rest, try to reduce your working hours, and perhaps cut down on some social commitments.

If you can't sleep, at least put your feet up and relax for 30 minutes or more, however is best for you. Relaxation techniques such as yoga, stretching, deep breathing and massage are all good at reducing stress and can help you get a better night's sleep.

There's nothing like chatting with others who are at just the same stage of pregnancy as you.

Thursday, June 28, 2012

மிளகின் பயன்கள்


*தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.   
 
* மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.  
 
* சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்.
http://www.maalaimalar.com/2011/02/19090040/medical-value-in-black-Pepper.html

பூண்டின் மருத்துவ குணங்கள்


உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும் தன்மை பூண்டிற்கு உண்டு.
 
*இதய அடைப்பை நீக்கும் தன்மை கொண்டது.
 
*இது இரத்த அழுத்தம் வராமல் காக்கும். மேலும் இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் இந்த பூண்டு விளங்குகிறது.
 
*நாள்பட்ட சளித் தொல்லையை நீக்கும்.
 
*தொண்டை சதையை நீக்கும்.
 
*இது மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
 
*தாய்ப்பால் அதிகம் சுரக்க இந்த பூண்டு உதவுகிறது.
 
*மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.  
Source : http://www.maalaimalar.com/2009/05/28111401/medical.html

நலம் தரும் பழங்கள்

பழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற "அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
1. ஆப்பிள் - ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.
 
2. ஆரஞ்சு - எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
 
3. திராட்சை - சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு "வுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.
 
4. மாதுளை - இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.
 
5. அன்னாசி - "அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
 
6. பப்பாளி - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் "ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்.
Source : http://www.maalaimalar.com/2009/05/28111401/medical.html

Sunday, June 17, 2012

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயம்

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது.

அது எப்படியென்றால் வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும் என்பதாகும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சியை செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது. இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

Source http://www.maalaimalar.com/2012/05/13133856/body-cold-fenugreek.html

Monday, March 19, 2012

உங்கள் செல்லங்களை செக் பண்ணுங்க

கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் பாதுகாப்பாய் இருக்கும் குழந்தைகள் பிறந்த உடன் எத்தனையோ சோதனைகளை சந்திக்கின்றன. ஆரம்ப கட்ட பரிசோதனைகளிலேயே குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் கண்டறியப்பட்டுவிட்டால் அவர்களை மிகப் பெரிய நோய் பாதிப்புகளில் இருந்து அவர்களை பாதுகாக்கலாம் என்பதற்காகவே இதுபோன்ற பரிசோதனைகள் செய்யப்படுவதாக குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிதாய் பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாகவும், நோய் பாதிப்புகள் எதுவும் இன்றி இருக்கின்றனரா என்பதை அறிய எந்த வகையான பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்று குழந்தை நல மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

ஆரோக்கிய அம்சங்கள்

பிறந்த ஐந்து நிமிடத்திலேயே அப்கர் ஸ்கோர் எனப்படும் முதல் மதிப்பீடு செய்யப்படும். இந்தப் பரிசோதனை, இதயத் துடிப்பு வேகம், சுவாசித்தல், தசைகளின் ஆரோக்கியம், அனிச்சைச் செயல்கள், மற்றும் தோலின் நிறம் போன்ற ஐந்து வித்தியாசமான காரணிகளை உபயோகித்து புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் நலனின் ஆரோக்கியமான அம்சங்களை மதிப்பீடு செய்யப்படுகின்றன.

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஒரு உடற்பரிசோதனை கண் மற்றும் காது கேட்டல் மற்றும் பல்வேறு பிறப்புறுப்பு சம்பந்தமான ஒழுங்கின்மை என்பனவற்றைக் கண்டறிவதற்காக திரைப் பரிசோதனையும் செய்யப்படுகிறது. இந்த பரிசோதனைகளின் போதே நோய்கள் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண் பரிசோதனை

புதிதாகப் பிறந்த குழந்தைக்கு, கண் தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, பிறந்து இரண்டு மணி நேரங்களுக்குப் பின்னர், எரித்றோமைஸின் எனப்படும் கண் பூசு மருந்து கொடுக்கப்படும். இரத்தம் தகுந்த முறையில் உறைவதை உறுதி செய்வதற்காக, அவனுக்கு வைட்டமின் K ஊசி மருந்து கொடுக்கப்படும். மேலும் குழந்தைகளின் மலம் மற்றும் சிறுநீரின் வெளியேற்றங்கள் கண்காணிக்கப்பட்டு மஞ்சள்காமாலைக்கான அறிகுறிகளைக் காண்பித்தால், அதற்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படும்.

ரத்தப் பரிசோதனை

குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம்.

என்சைம் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு கண்புரை, மனவளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம். குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும். இந்தப் பரிசோதனைகளை குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குள் அதன் குதிகாலில் இருந்து சிறு துளி ரத்தத்தை எடுத்து செய்ய வேண்டும்.

ஹார்மோன் உற்பத்தி

பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையை பாதுகாக்க முடியும். அதேபோல் பிறவி தைராய்டு குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும்.

குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள குறைபாடுகளை போக்க முடியும் என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

Friday, March 9, 2012

அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட

அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட

உடல் மெலிவாக இருப்பது அழகு தான். அதற்காக சாப்பிடாமல் பட்டினி கிடப்பதால் அல்சர் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இந்த அல்சர் உருவாவதற்கு காரணம் "கேஸ்டிரைடிஸ்" என அழைக்கப்படும் இரைப்பையில் ஏற்படும் ஒரு வகையான வீக்கம். இந்த நோய் தென்மாநிலத்தை சேர்ந்தவர்களை அதிகம் தாக்குகிறது. இன்னொரு விடயம் வேலையில் காட்டும் அவசரம்.
அவசரத்தின் போது வயிற்றில் அதிக அமிலம் சுரக்கிறது. இதே போல் மற்றவர்களால் கவலைப்படும் போதோ அல்லது பொறாமைப்படும் போதோ கூட மூளையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. இதன் மூலம் அல்சர் உண்டாகிறது.
மேலும் அல்சர் உருவாக சில கிருமிகளும் காரணமாக உள்ளன என்கிறது மருத்துவ உலகம். அது ஆன்ட்ரல் கேஸ்டிரைடிஸ். வழக்கமாக வயிற்றில் சுரக்கும் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது வலி குறையும். மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடும் போது மீண்டும் வலி ஏற்படுகிறது. அல்சர் கிருமியை ஒழிப்பதற்கான மாத்திரை தான் அல்சர் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கும்.
தலைவலி உள்ளிட்ட உடல் வலிக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி கடைகளில் வாங்கி சாப்பிடும் தவறான மருந்துகளின் காரணமாகவும் அல்சர் வர வாய்ப்புள்ளது. அப்படி அல்சர் வந்த பின்னர் அது பல தொந்தரவுகளை உண்டாக்குகிறது. மேல் மற்றும் நடுவயிறு, மார்பெலும்பின் பின்புறம் எரிவது போன்ற வலியினை ஏற்படுத்தும். பசியின் போது வலிக்கும். குமட்டல் போன்ற அறிகுறியையும் ஏற்படுத்தும்.
இதனால் வயிறு உப்பியது போலத் தோன்றி ஏப்பத்தை உருவாக்கும். வயிறு காலியாக இருக்கும் போது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக அல்சர் உள்ளது என தெரிந்து கொள்ளலாம். இது போன்ற தொல்லைகள் சாப்பிட்ட பின்னர் மறைந்து மறுபடியும் உங்களைத் தொல்லை செய்யும். எப்படித் தடுக்கலாம்?
தினமும் திட்டமிட்டு தடுமாற்றம் இன்றி வேலைகளை செய்து முடிக்கவும். சாப்பாட்டில் காரம் குறைக்கவும். அசைவ உணவுகளை வாரத்தில் ஒருநாள் என்பது போல் தள்ளிப் போடவும். அப்படியே சாப்பிட நேர்ந்தாலும் மசாலா பொருட்களைக் குறைத்துக் கொள்ளலாம். வலி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து உபயோகிப்பதைத் தவிர்க்கவும். காபின் கலந்த உணவுகள் மற்றும் பானங்களுக்கு தடா போடவும்.
புகைப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தி விடலாம். வயிற்றை நீண்ட நேரம் காலியாக வைக்காமல் அவ்வப்போது குறைந்த அளவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். முன் எச்சரிக்கையாக இருந்தால் அல்சர் உருவாவதை தடுக்கலாம். அப்படியே வந்தாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
மூலிகைகளைப் போல செயல்பட்டு வயிற்றுப் புண்ணை ஆற்றும் வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன் கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.
இதே கீரை வகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.
மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். பாட்டி வைத்தியம் அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.
அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.
ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

Monday, March 5, 2012

தீக்காயம்

தீக்காயம்

தீவிர காயம்
சிகிச்சை முறை
10 நிமிடங்களுக்கு ஓடும் நீரில் காயத்தைக் காண்பிக்கவும்.
ஆம்புலன்ஸைத் தொடர்பு கொள்ளவும்.
பாதிக்கப்பட்டவரைக் கீழே படுக்க வைக்கவும். அவரை சௌகரியமான நிலைக்குக் கொண்டு செல்லவும்.
பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
கடிகாரம், நகை போன்ற தோலில் ஒட்டக்கூடிய பொருள்களை உடனடியாக அகற்றி விடுங்கள்.
நல்ல சுத்தமான முறையில் காயத்தை மூடி வைக்கவும்.

சிறிய காயங்கள்.
சிகிச்சை
பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது வலி தீரும் வரை நீரில் காயத்தைக் கழுவவும்.
தபால் தலை அளவை விட பெரிய அளவில் காயம் ஏற்பட்டிருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம். பெரிய தீக்காயங்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அத்தியாவசியம்.

துணிகளில் தீப்பற்றிக் கொண்டால் -
பதற்றப்பட்டு ஓட வேண்டாம். அப்படிச் செய்தால் தீ வேகமாகப் பரவும்.
தீக்காயம் ஏற்பட்டவரை உடனடியாகத் தரையில் படுக்க வைக்கவும்.
சம்பந்தப்பட்டவரை கனமான கோட்டாலோ, போர்வையாலோ சுற்றவும். நைலான் வகைகளை கண்டிப்பாகப் பயன்படத்தக் கூடாது.
பற்றிக்கொண்ட தீ அணையாமல் எரிந்து கொண்டிருந்தால், கீழே படுக்க வைத்து உருட்டலாம்.
அனைத்து விதமான தீக்காயங்களுக்கும் பொதுவான விதிமுறைகள்
ஆயில்மெண்ட், க்ரீம், களிம்பு வகைகளை பயன்படுத்தவே கூடாது.
பிளாஸ்திரி வகைகளை பயன்படுத்தக் கூடாது.
கொப்புளங்களை உடைக்கக் கூடாது.

பெரியவர்களுக்கு ஏற்படும் திடீர் நோய்ப்பிடிப்பு
வலிப்பு நோய்
காக்கை வலிப்பு என்று பரவலாக அழைக்கப்படும் வலிப்பு நோய் ஏற்படும்போது உடலிலுள்ள பல தசைகள் சுருங்குகின்றன. மூளையில் ஏற்படும் மின் அதிர்வுகளின் விளைவு இது. வலிப்பு ஏற்படும்போது, நினைவு தப்பிப் போகும். பாதிக்கப்பட்ட நபர் மூர்ச்சையடைந்து விடுவார்.

வலிப்பு நோய் எதனால் ஏற்படுகிறது?
தலை காயத்தினால்
மூளை பாதிக்கும் நோய்களால்
மூளையில் பிராண வாயு, குளுகோஸ் அளவு குறையும்போது
விஷம் சாப்பிடுவதால், மது அருந்துவதால்

வலிப்பு நோய் திடீர் என்று தாக்கும். தாக்குவதற்கு முன்னால் சில அறிகுறைகளைக் கண்டுகொள்ளலாம். புதிய சுவை, புதிய வாசத்தை உணர முடியும். வலிப்பு எந்த வகையில் வந்தாலும் சரி, எப்போது வந்தாலும் சரி, உடனடியாக சில விஷயங்களை நாம் செய்தாக வேண்டும். முதலில், அவர்களுக்குக் காற்றோட்டம் தேவை. அதை ஏற்படுத்தித் தர வேண்டும். பிறகு, அவரது நாடித் துடிப்பையும் சுவாசத்தையும் சரிபார்க்க வேண்டும்.சுற்றியிருக்கும் பொருள்களால் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

கண்டுபிடிப்பது எப்படி?
பொதுவான காரணிகள்
திடீரென மயக்கமடைதல்
ஆர்ச் வடிவில் பின்புறம் வளைதல்
தாக்குப்பிடிக்க முடியாமல் திணறல்

வலிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட மாற்றங்கள் நிகழும்
சத்தம் போட்டுக் கொண்டே திடீரென்று மயக்கமடைந்து கீழே விழுதல்.
அசைவில்லாமல் இருந்தல்
சுவாசம் தடைபடுதல்
திணறல், தாடைகள் இறுகுதல், இரைச்சலுடன் கூடிய சுவாசம், உதட்டையோ நாக்கையோ கடித்தல், கட்டுப்பாட்டை இழந்து விடுவது.
சில நிமிடங்களில் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்புதல், என்ன நடந்தது என்பதையே உணராமல் இருத்தல்.
சோர்வடைந்து, உடனே தூங்குதல்.

முதலுதவி செய்பவரின் பணி
காயமடையாமல் பாதுகாக்க வேண்டும்.
நினைவு தப்பிப் போனால், அருகிலிருந்து கவனித்துக் கொள்ளுதல்.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல்

சிகிச்சை
சம்பந்தப்பட்டவர் கீழே விழ நேர்ந்தால், அவரைத் தாங்கிப் பிடித்தல்.
காற்றோட்டம் ஏற்படுத்தலாம். கும்பல் கூடாமல் பார்த்துக் கொள்ளுதல்.
கூரான பொருள்கள், சூடான பானங்கள் போன்றவை அருகில் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல்.
எப்போது வலிப்பு ஆரம்பித்தது என்று குறித்து வைத்துக் கொள்ளுதல்.
அவரது தலையைப் பாதுகாக்க வேண்டும். முடிந்தால் தலையணையில் அவரது தலையைச் சாய்த்து வைக்கலாம்.
கழுத்துப் பகுதியில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்தலாம்.

பாம்புக்கடி


பெரும்பாலான பாம்புகள் ஆபத்தற்றவை. ஆபத்தான சில இந்தியப் பாம்புகள்.
இந்திய கோப்ரா
ராஜ நாகம் (King cobra)
Banded krait
Slender coral snake
Russell viper
Saw- scaled viper
Common krait
பாம்புகளிடம் விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும். சீண்டி விடுவதால் மட்டுமே பெரும்பாலான பாம்புகள் கடிக்கின்றன.

பாம்புக் கடி ஏற்பட்டால்
அமைதியாக இருங்கள்
பாம்பைப் பிடிக்க முயற்சிக்க வேண்டாம்.
கடிபட்ட இடத்திலிருந்து விஷம் பரவாமல் இருக்க Loove vplinˆ உபயோகிக்கவும். ரத்த ஓட்டத்தை அது கட்டுப்படுத்தக் கூடாது என்பதால் சற்று தளர்வான நிலையிலேயே இருப்பது நல்லது.
வீக்கம் பரவாமல் இருக்க நகைகளை உடனடியாக அகற்றுங்கள்.
காயத்தை வெட்டியெடுக்க வேண்டாம்.
விஷத்தை உறிஞ்சி எடுக்க வேணடாம்.
உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்.

விஷம்
ஒருவருக்கு  விஷத்தன்மை பரவியிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள்.
உதட்டில், வாயில் எரிச்சல், சிவப்பாக மாறுதல்
சுவாசத்தில் இரசாயண நெடி அடித்தல்
உடலில், உடையில் உள்ள வாசனை, கறை
காலி மருந்து பாட்டில், சிதறியிருக்கும் மாத்திரைகள்
வாந்தி, சுவாசத் தடை, குழப்பம்.
கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்ட செல்லவும்.
மயக்கம்
சுவாசத் தடை
வலிப்பு

உதவிக்காகக் காத்திருக்கும் வேளையில்-
கார்பன் மோனாக்சைட் போன்ற ஆபத்தான வாயுக்களை அவர் சுவாசித்திருந்தால், உடனடியாக அவரை நல்ல காற்றோட்டமான பகுதிக்குக் கொண்டு செல்லவும்.

வீட்டில் கழுவப் பயன்படுத்தும் இராசயனத்தையோ அல்லது வேறு இரசாயனத்தையோ அருந்திவிட்டால், இந்த இரசாயன பாட்டிலுள்ள லேபிளைப் படிக்கவும். தெரியாமல் அதை அருந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும் அதில் அச்சிடப்பட்டிருக்கும். அல்லது, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

உடையிலோ, கண் அல்லது தோலிலோ விஷம் சிதறியிருந்தால், உடைகளைக் களைந்து விடவும். கண்ணை, தோலை குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

காலி பாட்டிலையும் கையோடு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

கவனம்
வாந்தி வருவதற்காக எதையாவது தர முயற்சிக்க வேண்டாம்.

மின்சாரத் தாக்குதல்
மின்சாரத் தாக்குதலின் விளைவு வோல்டேஜின் அளவுக்கு ஏற்ப மாறுபடும், தவிரவும், மின்சாரம் எந்த வழியாக உடலில் பாய்ந்தது என்பதையும் கவனிக்க வேண்டும்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும்
மாரடைப்பு
இதயக் துடிப்பில் மாறுதல் (Arrhythmias)
மூச்சு விட முடியாத நிலை
வலிப்பு
மரத்துப் போதல்
மயக்கம்

மருத்துவ உதவி கிடைக்கும் வரை என்ன செய்யலாம்?
தொட வேண்டாம்
சுவிட்சை உடனடியாக அணைத்து விடவும். பிளாஸ்டிக், மர பொருள்களால் மின்சாரம் தாக்கிய பகுதியை நகர்த்தலாம்.
சுவாசம், இருமல், அசைவை கவனிக்கவும். தேவைக்கு ஏற்ப சிறிசிஸி-ஐத் தொடங்கவும்.

கீழே படுக்க வைக்கவும். தலையை விட கால்களை உயர்த்தி வைக்கவும்.

எச்சரிக்கை
வெறும் கைகளால் அவரைத் தொட வேண்டாம்.
ஒயர்களிலிருந்து தீப்பொறி காணப்பட்டால். 20 அடிக்குப் பின்னால் நகர்ந்து விடவும்.
மிகவும் ஆபத்தான நிலையில் அவர் இல்லாத பட்சத்தில், அவரை வேறு இடத்துக்கு நகர்த்திச் செல்ல வேண்டாம்.

வெப்பம் தொடர்பான அறிகுறிகள்
சுளுக்கில் (Cramps) ஆரம்பித்து, ஆயர்ச்சி, வெப்பத்தாக்குதல் என்று பல அறிகுறிகள் உள்ளன.

வெப்பச் சுளுக்கு (CRAMPS)
அதிகம் வலிக்கும். போதிய அளவு நீராகாரம் இல்லாததால் ஏற்படலாம்.
என்ன செய்யலாம்?
ஓய்வு
பழச்சாறு அருந்தலாம்
1 மணி நேரத்துக்கு அதிகமாக நீடித்தால் மருத்துவ உதவி

வெப்ப அயர்ச்சி
கடினமான பணிகளுக்குப் பிறகு ஏற்படும்
மயக்கம்
வாந்தி
அதிக வியர்வை
கருத்த மேனி
குறைந்த ரத்த அழுத்தம்
குளிர்ந்த தோல்
மெலிதான காய்ச்சல்

என்ன செய்யலாம்?
நிழலான பகுதிக்கு நகர்த்திச் செல்லலாம்
படுக்க வைக்கலாம். கால்களை தலைமாட்டிலிருந்து உயர்த்தி வைக்கலாம்.
உடைகளைத் தளர்த்தலாம்.
குளிர்ந்த நீரைப் பருகத் தரலாம்.
விசிறி விடலாம். குளிர்ந்த நீரால் ஒத்தடம் தரலாம்.
கவனமாக கண்காணிப்பு அவசியம். வெப்பத் தாக்குதல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 102 டிகிரிக்கு மேலாகக் காய்ச்சல் இருந்தால், மருத்துவ உதவி பெற வேண்டியது அவசியம்.

வெப்பத் தாக்குதல்
வெயிலில் கடுமையான வேலைகள் செய்வதால் ஏற்படும். வயதானவர்களுக்கும் வியர்வை வெளியேறதாவர்களுக்கும் அதிகம் ஏற்படும். வெப்பத் தாக்குதல் ஏற்பட்டால் வியர்வை வெளியேறும் ஆற்றலும், சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்தும் ஆற்றலும் மறைந்து விடுகின்றன. 104 டிகிரிக்கு மேலே போனால் வெப்பத் தாக்குதல் ஏற்படலாம்.

பிற அறிகுறிகள்
அதிகரித்த இதயத் துடிப்பு
விரைவான அல்லது குறைச்சலான சுவாசம்
அதிகரித்த அல்லது குறைந்த ரத்த அழுத்தம்
வியர்வை நின்று போதல்
எரிச்சல், குழப்பம், மயக்கம்
என்ன செய்யலாம்?
நிழலான பகுதிக்கு அழைத்துச் செல்லலாம்
மருத்துவ உதவி பெறலாம்
தண்ணீர் தெளிக்கலாம். விசிறி விடலாம்.